![]()
CURRENT MOON தற்பொழுதிய சந்திர பிறை (திதி) தினம் ஒரு பழமொழிதினம் ஒரு திருக்குறள் |
அனைவருக்கும் நந்தன வருட நல்வாழ்த்துக்கள் யாருக்கு இரண்டு திருமணம் நடக்க அதிக வாய்ப்புண்டு? ஜாதகத்தில் லக்னத்திலிருந்து இரண்டில் ராகு மேஷம்கடகம் சிம்மம் கும்பம் பகை ; ரிஷபம் நீச்ச வீட்டில் அல்லது கேது மேஷம் கடகம் பகை ; சிம்மம் நீச்ச வீட்டில் இருந்தால் அதுவும் கூடவே எட்டாம் வீட்டு அதிபதி தசை நடந்தால் கேட்கவே வேண்டாம். இரண்டு விவாகம் அல்லது இரண்டு குடும்பங்கள் அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பெண்ணுடன் தொடர்புடையவன். தயவு தாட்சண்யம் பார்க்க மட்டான். சோம்பல் உடனிருக்கும். மன சஞ்சலம் உடையவன். சிறுவயதில் கஷ்டங்களை அனுபவிப்பான். வயதான காலத்தில் செளகரியமாக இருப்பான், வாயைத் திறந்தால் சண்டைதான். மூலநட்சத்திரம் மாமனை கொல்லுமா? மூல நட்சத்திரத்தில் பிறந்து லக்னத்திற்கு மூன்றாம் இயேசு கிறிஸ்து உண்மையிலேயே டிசம்பர் 25 ல் பிறந்தாரா?(உண்மை என்ன) அனைவருக்கும் ஆங்கில கால அளவு இரு பிரிவுகளாக கி.மு(கிறிஸ்துக்கு முன்) ,கி.பி(கிறிஸ்துவுக்கு பின்) பிரிக்கப்ப்ட்டு பபயன்பாட்டில் இருப்பது தெரிந்ததே.அதுபோல் டிசம்பர் 25 கிறிஸ்மஸ்(கிறிஸ்துவின் பிறப்பு) என்பதும் தெரியும்..பிறகென்ன கி.பி 0[கி.மு 1] வருடம்,டிசம்பர் 25ல் ,வால் நட்சத்திரத்தில் சுபயோக, சுப இலக்கினத்தில் அவதரித்தார் இறைவனின் திருமகன் என்று சொல்லிவிட்டு சென்றுவிடாமல் என்ன ஆராய்சி என்று கேட்கிறீர்களா? அது எப்படி ?ஒருவர் ஏதாவது சொன்னவுடன் அவர் சொல்வது சரியா என்று ஆதாரபூர்வமாக சரிபார்ப்பது என் இயல்பு.அத்தகைய தேடல்களையே பதிவிட்டு வருகிறேன்.சென்ற பதிவுகளை படித்தவர்களுக்கு திரு இயேசுவின் வரலற்றை ,புதிய ஏற்பாடு(1 to2 நூற்றாண்டு) தவிர சில வரலாற்று குறிப்புகள் மட்டுமே உள்ளன என்பது தெரியும்.. அந்த் வரலாற்றுக் குறிப்புகள் கூட இயேசுவின் பிறப்பை புதிய ஏற்பாட்டின் அடிப்ப்டையிலேயே கூறுகின்றன.சமகால வரலாற்று அறிஞர் திரு ஜோசஃபஸ் பிறப்பு (தேதி) குறித்து எதுவும் கூறவிலை என்றாலும் சில வரலாற்று நிகழ்வுகளாக அவர் குறிப்பிடுவதை வைத்து,புதிய ஏற்பாட்டு ஆகமங்களுடன் ஒப்பிட்டு கண்டு பிடிக்க முயல்கிறேன். முதலில் புதிய ஏற்பாட்டு ஆகமங்களில் அவர் பிறப்பு எவ்வாறு கூறபட்டு உள்ளது என்பதை பார்ப்போம். மத்தேயு,லூக்க இருவரும் பிறப்பை பற்றி சில விஷயங்கள் கூறியுள்ளனர்.மாற்கு,யோவான் இருவரும் இதனை பற்றி ஒன்றும் கூறவில்லை.அவற்றை வாசியுங்கள். __________________________ மத்தேயு 1 அதிகாரம் 18. இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாராகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. 19. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். 20. அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. 21. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். 22. தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. 23. அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம். 24. யோசேப்பு நித்திரை தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு; 25. அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான். ____________ 2 அதிகாரம் 1. ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, 2. யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள். 3. ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள். * * ********* லூக்கா 2 அதிகாரம் 1. அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது. 2. சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று. 3. அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும்படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள். 4. அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி, 5. கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப்போனான். 6. அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது. 7. அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள். ****** லூக்கா 3 அதிகாரம் 1. திபேரியுராயன் ராஜ்யபாரம் பண்ணின பதினைந்தாம் வருஷத்திலே, பொந்தியுபிலாத்து யூதேயாவுக்குத் தேசாதிபதியாயும், ஏரோது காற்பங்கு தேசமாகிய கலிலேயாவுக்கு அதிபதியாயும், அவன் சகோதரனாகிய பிலிப்பு காற்பங்கு தேசமாகிய இத்துரேயாவுக்கும், திராகொனித்தி நாட்டிற்கும் அதிபதியாயும், விசானியா காற்பங்கு தேசமாகிய அபிலேனேக்கு அதிபதியாயும், 2. அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியராயும் இருந்தகாலத்தில் வனாந்தரத்திலே சகரியாவின் குமாரனாகிய யோவானுக்கு தேவனுடைய வார்த்தை உண்டாயிற்று. இதில் இருந்து நமக்கு ஆய்வுக்கு உதவுவது சில வசனங்கள் மட்டுமே அவையாவன. ___________________ மத்தேயு(2 அதிகாரம்) 1. ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, ____________________ லூக்கா 2 அதிகாரம் 1. அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது. 2. சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று. ..... 16. அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண் பிள்ளைகளையும் கொலை செய்த _____________________ லூக்கா(3 அதிகாரம்) 1. திபேரியுராயன் ராஜ்யபாரம் பண்ணின பதினைந்தாம் வருஷத்திலே, பொந்தியுபிலாத்து யூதேயாவுக்குத் தேசாதிபதியாயும், ஏரோது காற்பங்கு தேசமாகிய கலிலேயாவுக்கு அதிபதியாயும், அவன் சகோதரனாகிய பிலிப்பு காற்பங்கு தேசமாகிய இத்துரேயாவுக்கும், திராகொனித்தி நாட்டிற்கும் அதிபதியாயும், விசானியா காற்பங்கு தேசமாகிய அபிலேனேக்கு அதிபதியாயும், .......................... 21. ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம் பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, ஜெபம்பண்ணுகையில், வானம் திறக்கப்பட்டது; 22. பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல் அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது. 23. அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன். _______________ இதில் இருந்து இந்த வரலாற்று கூற்றுகளை கூறலாம். 1.இயேசு பிறந்த போது இரோம அரசர் அகஸ்டஸ் சீசர் [.பிறப்பு 3 September 63 BC (Roman calendar)_இறப்பு:19 August AD 14 (Julian calendar) (aged 75),அரசாட்சி:16 January 27 BC – 19 August C.E 14 (40 years, 215 days)] 2.கலிலேயா(அப்போதைய பாலஸ்தீனத்தின் ஒரு பகுதி)வின் அரசன் ஏரோது. [பிறப்பு:73/74 BCE__இறப்பு:4 BCE (aged 70),அரசாட்சி:37BCE–4 BCE 3.சீரியா நாட்டிலே சிரேனியு[Cyrenius 51 BC - AD 21)] என்பவர் அரசாண்டார். 4. திபேரியுஸ் சீசர் (அகஸ்டஸ் சீசரின் வாரிசு) அரசாட்சி ஏற்று 15 வருடங்களுக்கு பிறகு யோவான் தன் பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார்.அப்போது இயேசுவிற்கு 30 வயது [.பிறப்புNovember 16, 42 BC__ இறப்பு:March 16, C.E 37 (aged 77),அரசாட்சி :18 September 14 C.E,16 March to 37 C.E(22 years, 183 days)] ___________ இதில் இருந்த நாம் விளங்குவது. 1.இயேசுவின் பிறந்த தேதி குறிப்பிட்டு சொல்ல முடியாது.டிசம்பர் 25 என்பது சூரிய கடவுளின் பிறப்பை கொண்டாடிய இரோம மக்கள் இயேசுவின் பிறந்த நாளாக மாற்றிவிட்டனர். 2.அரசன் ஏரோது பொ.மு 4ல் இறந்து விடுகிறார்.இதனை ஜோசஃபசும் உறிதிப்படுத்துகிறார். இன்னும் இயேசு பிறந்த பின் அவ்வயது குழந்தைகளை கொல்ல ஆணையிட்டதாக (மத்தேயு 2.16)ல் படிக்கிறோம். ஆகவே குறைந்த பட்சம் இயேசு பொ.மு 4கு முன்பே பிறந்து இருக்க வேண்டும். 3.திபெரியஸ் அரசு பொறுப்பேற்றது பொ.பி 14 ஆக 14+15=பொ.பி 29 என்றால் இயேசு குறைந்த பட்சம் பொ.மு 2அல்லது 3 ல் பிறந்து இருக்கலாம் . முடிவாக திரு இயேசு என்பவர் பொ.மு(BCE) 4க்கு முன்னரே பிறந்து இருக்க வாய்ப்பு உள்ளது.ஜூலியஸ் சீசர் காலத்தில் இருந்தே நாள்காட்டி ,மக்கள் தொகை கணக்கிடும் வழக்கம் இருந்து வந்துள்ளது.பொ.மு 6ல் ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பும் நடந்துள்ளது.முதலில் ஜூலியன் காலண்டர் எனவும் பிறகே ரோமன் காலண்டர் எனவும் நாள்காட்டி அழைக்கப்பட்டது. போப் கிரிகாரியன் XIII ரோமன் காலண்டரை கிரிகாரியன்(கிறித்தவ) நாள்காட்டிகயாக மாற்றினார்.அதனாலேயே ரோம நாள்காட்டி கிறித்துவின் பெயரால் அழைக்கப்படுகிறது. ஆயிலியம் மாமியாருக்கு ஆகாதா? ஆயில்யம் நட்சத்திரம் - கடகம் ராசிஆயில்யம் - புதன் - விஷ்ணு ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்) "அவள் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவள். ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது என்பார்கள்" ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் கும்ப லக்கினமாக இருந்தால் எந்தத் தீங்கும் நேராது ஒரே லக்கினக்காரர்கள் என்பதால் வரன் , மாமியார் இருவருடைய குணங்களும் ஒரே மாதிரியாக இருக்கும். ஒற்றுமையாக இருப்பார்கள் அல்லது விட்டுக் கொடுத்துப் போய்விடுவார்கள். ஆயில்யம் நட்சத்திர வரனின் ஜாதகத்தில் 11ம் வீடு , 11ம் வீட்டு அதிபதி , 11ல் அமரும் கிரகம், 11ம் வீட்டை பார்க்கும் வலுவாக இருந்தால் மாமியாருக்கு பாதிப்பும் இல்லை. ஆயில்யம் நட்சத்திரனின் மாமியாரின் ஜாதகத்தில் 8ம் வீடு , 8ம் வீட்டு அதிபதி , 8ல் அமரும் கிரகம், 8ம் வீட்டை பார்க்கும் வலுவாக இருந்தால் பாதிப்பும் இல்லை. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவருக்கு வரன் தேடும் போது வரன் , மாமியார் இருவர் ஜாதகத்தையும் கேட்டு வாங்கி பொருத்தம் பாருங்க. மாமியார் ஜாதகத்தில் உடல் குறைபாடு , ஆயுள் எப்படி இருக்கு என்று பாருங்க. அதைவிட்டு ஆயில்யம் நட்சத்திரமா வேண்டாம் என்று ஒதுக்காதிற்கள் ஜாதகத்தில் ஆயில்யம் நட்சத்திரம் - கடகம் ராசி லக்கினம் மேஷம் முதல் மீனம் அந்த தசை புக்தி காலங்களில் இந்த மாமியாருக்கு எந்த பாதிப்பும் இல்லை. லக்கினம் மேஷம் 80% ரிஷபம் 70% மிதுனம் 50% கடகம் 90% சிம்மம் 50% கன்னி 70% துலாம் 80% விருச்சிகம் 90% தனுசு 60% மகரம் 80% கும்பம் 60% மீனம் 90% Example : 01. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் கடகம் லக்கினமாக இருந்தால் மாமியாருக்கு எந்தத் தீங்கும் 90% நேராது. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் திருமனம் 13/09/2007ல் நடந்தது. Example : 02. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் தனுசு லக்கினமாக இருந்தால் மாமியாருக்கு எந்தத் தீங்கும் 60% நேராது. Example : 03. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் மிதுனம் லக்கினமாக இருந்தால் மாமியாருக்கு எந்தத் தீங்கும் 50% நேராது. Example : 04. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் கும்பம் லக்கினமாக இருந்தால் மாமியாருக்கு எந்தத் தீங்கும் 60% நேராது. எந்த நோய்க்கு எந்த கிரக வழிபாடு அவசியம் ?ஜோதிட சாஸ்திர விதிப்படி , மனிதனாக பிறந்த ஒரு சாதகனின் பூர்வ ஜென்ம
கர்மாக்களை தரம் பிரித்து , பலா பலன்களை தெளிவாக தருவது - நவ கிரகங்களே.
ஒன்பது கிரகங்களும் , அதற்கேற்ப பன்னிரண்டு வீடுகளில் அமர்ந்து , இந்த
நேரத்தில் , இந்த பலன்கள் என்று தெளிவாக கிடைக்க வைக்கின்றன. கிரகங்களும் - அவற்றை சாந்திசெய்யும் நவரத்தின கற்களும்: சூரியன் - மாணிக்கம்சந்திரன் - ஜாதி முத்து செவ்வாய் - சிகப்பு பவளம் புதன் - மரகதம் குரு - கனக புஷபராகம் சுக்கிரன் - வைரம் சனி - நீலம் ராகு - கோமேதகம் கேது - வைடூரியம் இரண்டு ரத்தினங்களை இணைக்கும்போது, அவைகளுக்குள் பேதை ஏற் படுமானால், நடுவில் ஏதேனும் சாதாரண கல்லினை வைக்க வேண்டும். மோதிரம் அடியில் திறப்புடன் ஓபன்- செட்டிங் முறையில் அமைக்கப்பட வேண்டும். நோயின் தாக்கம் தீர்ந்தவுடன், மோதிரத்தை எடுத்துவிட வேண் டும். மேலே குறிப்பிட்டவை பொதுவானது ஆகும். தனிப்பட்ட ஜாதகங் களில், கிரகங்களின் நிலையை ஆராய்ந்து, நவரத்தினங்களை உரிய முறையில் அணிந்து, நன்மைகளைப் பெறலாம். எண் கணிதம் கொஞ்சம் தெரிந்து கொள்வதும் , ஒரு நல்ல ஜோதிடருக்கு அழகு. எந்த வகையில் எண் கணித ஞானம் வேண்டும் என்பதை மூன்றாம் எண்ணை , குரு பகவானை , ராசி கற்களை உதாரணமாக வைத்து இன்று பார்க்கலாம். மஞ்சள் நிறமுடைய புஷ்பராகக்கல் , மூன்றாம் எண் குருவிற்கு உரியது. 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் எண் 3ஆம் எண்ணாகும். இந்த மூன்றாம் எண்காரர்கள் பொதுவாக வசீகரமானவர்கள். ஆண்கள் கம்பீரமாக இருப்பார்கள். இந்த எண்ணில் பிறந்த பெண்கள் அழகாக இருப்பார்கள். சிலர் திரும்பிப் பார்க்க வைக்கும் அழகுடன் இருப்பார்கள் ஜோதிடமாகட்டும் அல்லது எண் ஜோதிடமாகட்டும், குருவிற்கு முக்கியமான பங்கு உள்ளது. சூரியனிட மிருந்து தான் பெறும் சக்தியைவிடப் பன்மடங்கு சக்தியை வெளிபடுத்தும் கிரகமாகும் அது.C G L S என்கிற எங்கள் குரு பகவானுக்கு உரிய எழுத்துக்கள். நீங்கள் தொழில் தொடங்க ஆலோசனை கூறினால் , குருவுக்குரிய இந்த எழுத்துக்களில் தொடங்கினால் வெற்றி நிச்சயம். நியாயத்தையும், தர்மத்தையும் போதிக்கும் கிரகம் அது. அதனால்தான் அதற்குப் பிரஹஸ்பதி அல்லது வாத்தியார் என்ற பெயரும் உண்டு. பண்டைய நூல்கள் குருவை முக்கியப்படுத்திப் பல செய்திகளைச் சொல்கின்றன. சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் குருவிற்கு நட்புக் கிரகங்களாகும். தனுசு, மீனம் ஆகிய இரண்டு ராசிகளும் குருவிற்குச் சொந்த இடங்களாகும். கடகம் உச்சமான இடம். மகரம் நீசமான இடம். பாக்கியஸ்தானம் எனப்படும் ஒன்பதாம் வீட்டிற்குக் காரகன் குரு. தந்தைக்குக் காரகன் சூரியன் என்றபோதிலும். ஒன்பதாம்வீட்டின் மற்ற செயல்பாடுகளுக்கெல்லாம் குருவே அதிபதி. ஒன்பதாம் வீடுதான் அதிர்ஷ்டத்தைக்குறிக்கும் வீடு. அதிர்ஷ்டத்திற்கு அதிபதி குரு. அதை மறக்க வேண்டாம். ஜாதகத்தில் குரு, கேந்திர கோணங்களில் இருப்பது நன்மை பயக்கும்! நுண்ணறிவு, திருமணம், வாரிசு, ஆகியவற்றிற்கும் குருவின் அமைப்பு முக்கியம். பெண்ணின் ஜாதகத்தில் குருவின் அமைப்பைவைத்துத்தான் அவளுக்கு நல்ல கணவன் அமைவான். ஜாதகத்தில் குரு மறைவிடங்களில் இருந்தால் திருமணம் தாமதமாகும். சனி, ராகு அல்லது கேதுவுடன் கூட்டாகவோ அல்லது எதிரெதிர் பார்வையுடனோ இருக்கும் குருவால், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. மிதுனம், கன்னி லக்கினக்காரர்களுக்கு, அதுபோன்ற அமைப்பு இருந்தால், சிலரது திருமணம் விவாகரத்தில் முடிந்துவிடும். மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் கடினமான உழைப்பாளிகள். விடாமுயற்சியுடன் செயல்படக்கூடியவர்கள். தங்களைத் தாங்களே பலவிதமான செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ளக்கூடியவர்கள். சோம்பேறித்தனம் என்பது சிறிதும் இருக்காது. அதீதமாகப் பொருள் ஈட்டக்கூடியவர்கள். அதாவது சம்பாதிக்கக்கூடியவர்கள். அறவழிகளில் ஈடுபாடு உடையவர்கள். கடமையே வெற்றிக்கு வழி என்பதிலும் உறுதியாக இருக்கக் கூடியவர்கள். செயல்படக்கூடியவர்கள். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கக்கூடியவர்கள். ஓய்வு என்று சொல்லி ஒரு இடத்தில் சும்மா இருக்கமாட்டார்கள். செய்யும் வேலை அலுப்பைத் தந்தாலும், அதை விடாது செய்து முடிக்கும் ஆற்றலைக் கொண்டவர்கள். எந்த வேலையை மேற்கொண்டாலும், அதை வெற்றிகரமாகச் செய்து முடிக்கக்கூடியவர்கள். அந்த விதமான செயல்பாடே அவர்களுக்கு அதீதமான தன்னம்பிக்கையைக் கொடுக்கும். அந்தத் தன்னம்பிக்கைதான் அவர்களின் தாரக மந்திரம். சொன்ன சொல்லையும், கொடுத்த வாக்கையும் காப்பாற்றக் கூடியவர்கள். அதனால் பலரது நம்பிக்கைக்கும் ஆளாகியிருப்பவர்கள். எதிலும் ஒரு ஒழுங்கை விரும்புபவர்கள். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று சிறப்புடன் வாழ்பவர்கள். அன்பு, பாசம், பரிவு, ஆலோசனை என்று அனைத்தும் இவர்களைத் தேடி வரும். சமூக அந்தஸ்தும் தேடிவரும். ஆரோக்கியமான உடற்கட்டு இருக்கும். வாழ்க்கையுடன் இயைந்து போவார்கள். ஆக்கபூர்வமானவர்கள். மகிழ்ச்சியை உடையவர்கள். நகைச்சுவை உணர்வுடையவர்கள். மற்றவர்களுக்குத் தூண்டுதலாக விளங்கக்கூடியவர்கள். மற்றவர்களுக்கு உதவக்கூடியவர்கள். ஒற்றிலக்க எண்களில் - அதாவது 1,3,5,7,9 எனும் எண்களில் 3ஆம் எண்தான் அதிக சக்தியுள்ள எண். கடுமையான உழைப்பினால், சிலருக்கு, மன அழுத்தங்கள் உண்டாகும். சில இடையூறுகள் ஏற்படும். ஆனால் இந்த எண்ணிற்கு இயற்கையாகவே உள்ள அதிர்ஷ்டம்தரும் அமைப்பினால், அவைகள் எல்லாம் அவ்வப்போது களையப்பட்டுவிடும். தேவையானபோது இந்த எண்காரர்களுக்குப் பணம் கிடைத்துக் கொண்டே இருக்கும். செய்யும் வேலையில் அல்லது தொழிலில் தலைமை ஏற்கும் நிலைக்கு உயர்வார்கள். நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள்: 3,12, 21 மற்றும் 30. அதுபோல 6,9,15,18,24 & 27 தேதிகளும் நன்மை பயக்கக்கூடியதாகவே இருக்கும். வியாழக்கிழமை உரிய கிழமையாகும். அதுபோல திங்கள், செவ்வாய் & புதன் கிழமைகளும் இந்த எண்காரர்களுக்குச் சாதகமான கிழமைகளே! இந்த எண்காரர்களுக்குச் சாதகமான நிறம் மஞ்சள். மஞ்சள் நிறத்தில் துண்டு, படுக்கைவிரிப்பு, தலயணை உறை, கைக்குட்டை என்று எல்லாவற்றிலும் மஞ்சள் நிறத்தையே போற்றி வைத்துக்கொள்ளலாம். நவரத்தினங்களில் மஞ்சள் நிறமுடைய புஷ்பராகக்கல் நன்மை பயக்கும்! உடல் நலம்: இந்த எண்காரர்களுக்கு, நீரழிவு நோய், மஞ்சள்க் காமாலை நோய் போன்றவைகள் வரக்கூடும். எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இந்த எண்காரர்களின் வாழ்க்கையில், 21, 30, 33, 36, 48, 57, 66, ஆகிய வயதில் வாழ்க்கை ஏற்ற முடையதாக இருக்கும்
குழந்தை பாக்கியம் 1. அறிவான குழந்தை பாக்கியம் : 1. 5ம் பாவாதிபதி சபக்கிரக தொடர்புடன்-சுப கிரக இராசியில் இருத்தல். 2. 5ம் பாவாதிபதியின் இருபுறமும் சுப கிரகமிருத்தல். 3. 5ம் பாவாதிபதி உச்சமடைந்திருத்தல். 4. குரு - கோணங்களில் இருத்தல். 5. 5ம் அதிபதி சுபர் வீடுகளாகிய ரிஷபம்,துலாம்,மிதுனம்,கன்னி,தனுசு,மீனம்,கடகம்,இதில் இருத்தல். 6. புதன் 5 ல் இருத்தல். 7. 5ம் அதிபதி உச்சமடைதல். 8. 5ம் அதிபதி கேந்திரத்தில் இருத்தல். 9. குரு தன் ராசிகளான தனுசு,மீனம் இவைகளில் ஜாதகத்தில் இருந்து,அது போல் நவாம்சத்திலும் தனது சொந்த வீட்டில் இருத்தல். 2. பிள்ளைகளால் பெற்றோர் சஞ்சலமடையும் யோகம் : 1. 5ம் பாவம் சிம்மராசியாகி அதில் சனி,செவ்வாய் இருத்தல். 2. 5ம் அதிபதி 6ல் இருத்தல். 3. 5ம் பாவம் செவ்வாய் வீடுகளாக அமைந்து அதை செவ்வாய் பார்ப்பது. 4. 5ம் பாவம் செவ்வாய் வீடுகளாகிய அமைந்து அதில் ராகு இருந்து செவ்வாய் தொடர்பு ஏற்படுதல். 5. குரு நீச்சமடைவது. 6. 5ம் பாவத்தில் சனி இருத்தல். 7. 5ம் பாவத்தில் 3க்கு மேல் பாவ கிரகங்கள் இருத்தல். 8. 5ம் பாவத்தில் குரு இருந்து அதை சுக்கிரன் பார்த்தால்-கூடி இருத்தல். 9. 5ம் பாவம் குருவின் ராசிகளான தனுசு,மீனமாக இருத்தல். 10. குரு இருக்கும் ராசிக்கு 5ல் பாபிகள் இருத்தல். 3. தாமத குழந்தை பாக்கியம் : 1. லக்ன அதிபதி சுபருடன் சேர்ந்து 6-8-12ல் இருத்தல். 2. 5ம் பாவ அதிபதி சுபருடன் சேர்ந்து 6-8-12ல் இருத்தல். 3. 9ம் பாவ அதிபதி சுபருடன் சேர்ந்து 6-8-12 ல் இருத்தல். 4. அதிக சுப கிரகங்கள் 10ம் பாவத்திலும் அதிக பாப கிரகங்கள் 5ல் இருத்தல். 5. குரு 4 அல்லது 5ல் 8ம் பாவத்தில் சந்திரன் இருப்பது. 6. பாப கிரகங்களின் ராசிகள் லக்னமாக அமைவது. 7. ஆட்சி பெற்ற சந்திரன் பாப கிரகத்தோடு சேர்தல்-பார்த்தல்-தொடர்பு. 8. சூரியன்,சனி சமசப்தமாக இருத்தல். 9. 11ம் பாவத்தில் ராகு இருத்தல். 10. 5ல் குரு,5ம் அதிபதி சுக்கிரனுடன் சேர்தல்-பார்த்தல்-தொடர்பு. 4.தாய்-தந்தை-குழந்தை ஜாதக ஒற்றுமை : 1. தாய் அல்லது தந்தை ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசியிலிருந்து 1-5-7-9ல் குழந்தையின் ஜன்ம லக்னம் அல்லது சந்திரன் இருக்கும். 2. தாய் அல்லது தந்தை ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 1-5-9ல் குழந்தையின் ஜன்ம லக்னமாய் அல்லது சந்திர ராசியாக இருக்கும். 3. தாய் அல்லது தந்தை ஜன்ம லக்னம் குழந்தைக்கு சந்திர ராசியாக இருக்கும். 4. தாய் அல்லது தந்தை சந்திர ராசி குழந்தைக்கு ஜன்ம லக்னமாக இருக்கும். 5. தாய் அல்லது தந்தையாருக்கு சூரியன் இருக்கும் அதே பாவத்தின் குழந்தையின் லக்னம் அல்லது சந்திர ராசியாக இருக்கும். 5. ஆண் குழந்தை யோகம் : 1. 5ம் பாவம் மேஷம்,ரிஷபம்,கடகமாக இருத்தல். 2. 5ம் அதிபதி,5ம் பாவம்,சுப கிரக தொடர்பு-சேர்க்கை-பார்வை. 3. குரு சுபக் கிரக சேர்க்கை-தொடர்பு. 4. லக்னாதிபதி 5ல்,5ம் அதிபதி குரு சேர்க்கை-தொடர்பு. 5. லக்னாதிபதி 5ம் அதிபதியைப் பார்ப்பது. 6. லக்னாதிபதி 5ம் அதிபதி சேர்ந்து கேந்திரங்களில் இருத்தல். 7. லக்னாதிபதி 5ம் அதிபதி 9ம் அதிபதி மூவரின் சேர்க்கை-பார்வை-தொடர்பு. 8. லக்னம் அல்லது சந்திரன் இருக்கும் ராசியிலிருந்து 5மிடம் சுப ராசியாகி,அதில் சுபகிரகம் இருத்தல். 9. 5ம் பாவம் ஆண் ராசிகளாக இருத்தல். 10. லக்னாதிபதியும் 5ம் அதிபதியும் பரிவர்த்தனை-வர்க்கோத்தும் அடைதல். 6. பெண் குழந்தை யோகம் : 1. 5ம் பாவம் பெண் ராசிகளாக அமைவது. 2. 5ம் பாவத்தில் சுக்கிரன்-சந்திரன் இருத்தல். 3. 5ம் பாவாதிபதியுடன் சுக்கிரன்-சந்திரன்,தொடர்பு-பார்வை-இணைவு. 4. 5ம் பாவாதிபதி 2 அல்லது 8ல் இருத்தல். 5. 11ம் ராசியில் புதன்-சந்திரன்-சுக்கிரன் இருத்தல். 7. முதலில் ஆணா? பெண்ணா? யோகம் : 1. லக்னாதிபதி லக்னத்தில் அல்லது 2ல் அல்லது 3ல் முதலில் ஆண் குழந்தை. 2. உபய ராசியில் சந்திரன்-செவ்வாய்-சுக்கிரன் முதலில் ஆண் குழந்தை. 3. 5ம் அதிபதி ஆண் கிரகமாகவும் அது ஆண் ராசிகளில் இருந்தும்,ஆண் ராசி நவாம்சடைந்திருந்தால் முதலில் ஆண். 4. 5ம் அதிபதி பெண் கிரகமாகவும் அது பெண் இராசிகளில் இருந்தும்-பெண் ராசி நவாம்சத்தையும் அடைந்திருந்தால் முதலில் பெண். 5. 5ல் சந்திரன்-சுக்கிரன் இருவரும் சேர்ந்து இருந்தால் முதலில் பெண்.
|
|||








