MOBILE ASTROLOGY 

"ARE YOU WANT YOUR FULL HOROSCOPE WITH PREDICTION IN TAMIL OR ENGLISH "

  1. PLEASE SENT SMS YOUR FULL NAME YOUR DATE OF BIRTH AND TIME ,BIRTH PLACE AND YOUR ADDRESS WHAT language TAMIL OR ENGLISH IN HOROSCOPE  YOUR ADDRESS
MOBILE NUMBER SRI LANKAN :0776221029
                          INDIAN         :0094776221029

        " service fee:300/-(SRILANKAN RUBE)"

 

  • Home-முதல் பக்கம்

  • இலவசமாக ஜோதிட கற்க இங்கு செல்லவும்

  • இலவசமாக ஜாதகம் கணிக்க இங்கு செல்லவும்

  • இலவசமாக திருமண பொருத்தம் பார்க்க இங்கு செல்லவும்

  • இலவசமாக உங்கள் பெயர்,பிறந்த திகதி பலன்களை அறிய இங்கு செல்லவும்

  • இலவச சித்த மருத்துவ குறிப்புகளுக்கு இங்கு செல்லவும்

  • இலவசமாக முஹூர்த்த நேரம் அறிய இங்கு செல்லவும்

  • இலவசமாக நவக்கிரக தகவல்களை அறிய இங்கு செல்லவும்

  • இலவசமாக அரிய பலன் தரு மந்திரங்களை அறிய இங்கு செல்லவும்

  • இலவசமாக உங்கள் செய்யுள்களை சரி பார்க்க-தமிழ் யாப்பு இங்கு செல்லவும்

  • sri-saddanather-temple ஸ்ரீ-சட்டநாதர்-சிவன்-கோயில்

  • vellaipillayar-வெள்ளைப்பிள்ளையார் தேவஸ்தானம்

  • Contract Us தொடர்புகளுக்கு

  • SRI PARAMANANTHAM ASTRO

    சனிப்பெயர்ச்சி பலன்கள் 2011 

    பால ஜோதிட சனிப்பெயர்ச்சி பலன்களை பெற்றுக்கொள்ள இங்கே கிளிக்செய்யவும் Clickhere

    சனிப்பெயர்ச்சி பலன்களை பெற்றுக்கொள்ள இங்கே கிளிக்செய்யவும்

     

    ஜாதகம் கணிக்கும் வழி

    லக்னம் என்றால் என்ன?
    லக்னம் என்பது ஒரு குழந்தை பிறந்த குறிப்பிட்ட காலத்திற்குப் பெயர். அதைச் சற்று விளக்குவோம்.
    ராசி என்பது 12 சம பாகமாகப் பிரிக்கப்பட்ட பூமண்டலத்தின் பாகம். சூரியனும் மற்ற கிரகங்களும் கிழக்கிலிருந்து மேற்குப் பக்கமாகச் சுற்றுகின்றன. அதே சமயத்தில் மேஷாதி 12 ராசிகளைச் சம பாகமாகக் கொண்ட பூமண்டலமானது மேற்கிலிருந்து கிழக்குப் பக்கமாகச் சுற்றுகிறது. அப்படிச் சுற்றும்பொழுது பூமண்டலத்தின் எந்தப் பாகம் கிழக்கில் நமக்கு நேராக வருகிறதோ அந்த ராசிக்கு லக்னம் என்று பெயர்.
    அதாவது, அந்த நேரத்தில் பிறந்த குழந்தைக்கு அந்த ராசியை லக்கினமென்று சொல்வார்கள். மற்றும் அப்பொழுது கிரஹங்கள் எந்த எந்த ராசியில் இருக்கின்றனவோ, அதையும் குறித்து வைத்துக் கொள்வார்கள். இதேல்லாம் சேர்ந்ததற்கே ஜாதகச் சக்கரம் அல்லது ராசிச் சக்கரம் என்று பெயர்.
    இனி லக்னம், கிரஹநிலை, தசாபுக்தி ஆகியவற்றைக் கணிக்கும் வழியை ஓர் உதாரணம் மூலமாக விளக்குவோம்…
    உதாரண ஜாதகம்
    விகாரி வருடம் தை மாதம் 9-ம் தேதி வெள்ளிக்கழிமை, சுவாதி நக்ஷத்திரம் 29-27 மறுநாள் விசாகம் 25-42 (23-1-1960 @ 5-40 A.M...) இரவு மணி 5.40க்கு (சனிக்கிழமை விடியற்காலை) சென்னையில் ஓர் ஆண் குழந்தை பிறந்ததை வைத்துக் கொண்டு, அதற்கு ஜாதகம் கணிக்கும் விதத்தையும் கிரகங்களை அமைக்கும் வழியையும் தசா புக்திகள் கணிக்கும் விதத்தையும் கீழே விளக்குவோம்.
    ஒரு ஜாதகம் கணிக்குமுன் கீழ்க்கண்ட அம்சங்களை முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டும் :
    1. குழந்தை எத்தனையாவது அட்சாம்சத்தில் உள்ள ஊரில் பிறந்தது?
    2. அந்த அட்சாம்ச ரேகைக்குத் தக்கபடி மேஷாதி ராசிப் பிரமாணங்கள் என்ன?
    3. குழந்தை ஜனனமான தேதியில் அது பிறந்த ஊரில் சூரிய உதயம், எத்தனை மணி, எத்தனை நிமிஷத்துக்கு நிகழ்ந்தது?
    4. சூரியோதயம் முதல் குழந்தை பிறந்தது வரையில் எத்தனை நாழிகை எத்தனை விநாடிகள் சென்றன?
    5. சிசு பிறந்த நட்சத்திரத்தின் மொத்த நாழிகை என்ன?

         இவற்றைப் பஞ்சாங்கத்தின் உதவியால் முக்கியமாகக் குறித்து வைத்துக் கொண்டால் சுலபமாக ஜாதகம் கணித்துவிடலாம்.

    1. சூரிய உதயம்

      இந்தக் குழந்தை சென்னையில் பிறந்தது.

      சென்னையில் அட்சாம்சம் 13. சென்னையில் அன்றைக்குரிய உதயம் 6-39. தை மாதம் 9-ஆம் தேதி வெள்ளிக்கிழமை. குழந்தை விடியற்காலை மணி 5-40க்குப் பிறந்தது. அதாவது சனிக்கிழமை உதயத்துக்கு முன் 0-59 நிமிஷங்களுக்கு முன்னதாகப் பிறந்துள்ளது. நம் நாட்டு வழக்கப்படி சூரிய உதயத்திலிருந்து அடுத்த சூரிய உதயம் வரையில் ஒரு நாள் என்று கணக்கிடப்படும்.

    2. உதயாதி ஜனன நாழிகை

      வெள்ளிக்கிழமை சூரிய உதயம் முதல் குழந்தை பிறந்த நாழிகை விநாடிகள் வரையில் கணக்கிட வேண்டும. அது முதல் சனிக்கிழமை விடியற்காலை 5.40 வரையில் 23 மணி 1 நிமிஷம் ஆகும். மணி ஒன்றுக்கு 2 ½ நாழிகை வீதம் கணக்கிட, 57 நாழிகை 33 விநாடிகள் வரும். ஆகையால், வெள்ளிக்கிழமை சூரிய உதயாதி நாழிகை 57-33-க்கு அந்தக் குழந்தையின் ஜனனம் என்று  அறிய வேண்டும். 
      குறிப்பு : சூரிய உதயம் ஒவ்வொரு நாளும் காலை 6-00 மணிக்கே நிகழ்வதில்லை. காலை 5-39 முதல் 6-39க்கு இடையிலான காலத்தில் நாளுக்கு நாள் வித்தியாசமாக சூரியோதயம் ஆகிக்கொண்டிருக்கும். அதேபோல் இடத்திற்கு இடம் சூரியோதய காலம் மாறுபடும்.
      உதாரணமாக, சென்னையில் காலை 6-01க்குச் சூரியோதயமென்றால், ராமேசுவரத்தில் அதே தினத்தில் 6-09க்குச் சூரியோதயம் ஆகும்.
      ஆகவே, ஒரு குறிப்பிட்ட ஜாதகத்தைக் கணிப்பதற்கு முன், அந்தக் குழந்தை பிறந்த ஊரில் சூரியோதயம் எப்பொழுது நிகழ்ந்தது என்பதைப் பஞ்சாங்கங்கள் மூலம் துல்லியமாகத் தெரிந்து கொள்ளவேண்டும்.

      அட்சாம்சங்களும் ராசிப் பிரமாணமும்

      மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளை 360 சம பாகங்களாக (அதாவது ராசி ஒன்றுக்கு 30 பாகைகள் வீதம்) பிரித்திருக்கிறார்கள். இவற்றுக்கு அட்சாம்சம் (Latitude) என்று பெயர். பூமி முழுவதும் இந்த அட்சாம்ச ரேகைகளின் மீதே இருக்கிறது. அந்த அந்த அட்சாம்சங்களிலுள்ள பட்டணங்களுக்கு வெவ்வேறு ராசிமான சங்கியைகள் (அதாவது ராசியளவு நாழிகை, விநாடிகள்) ஏற்பட்டுள்ளன.
      இந்த அட்சாம்சங்களை அநுசரித்தே மேஷாதி ராசிகளின் கால அளவை அறிய வேண்டும். உதாரணமாக, சென்னையும், அதைச் சுற்றி சுமார் 100 மைல்களுக்கு உட்பட்ட பிரதேசங்களும் 13-ஆவது அட்சாம்சத்தில் இருக்கின்றன. ஆகையால், இந்த 13-வது அட்சாம்சத்தைச் சேர்ந்த இடங்களுக்கு மேஷ ராசிப் பிரமாணம் 4 நாழிகை 29 விநாடிகள் என்றால், இதே மேஷ ராசிக்கு 9-ஆவது அட்சாம்சத்தில் இருக்கும் ராமேசுவரத்துக்கு 4-37 விநாடியாகும். அதாவது சென்னையைக் காட்டிலும் 2 விநாடி குறைவு. (45-வது பக்கம் அட்டவணை 2-ஐ கவனிக்க).
      இம்மாதிரி, இடத்துக்கு இடம் மேஷாதி ராசிப் பிரமாணங்கள் மாறுபடும். ஆகையால், ஒரு குழந்தை பிறந்த இடம் எந்த அட்சாம்சத்தைச் சேர்ந்ததோ அந்த அட்சாம்சத்துக்குரிய மேஷாதி ராசிப் பிரமாணங்களைச் சூரியோதயம் தொடங்கி, குழந்தையின் ஜனன காலம் வரையில் கூட்டி லக்கினத்தை அறிய வேண்டும். இதைக் கவனிக்காவிட்டால் சரியான ஜாதகம் கணிக்க இயலாது.

    3. உதய லக்ன சேஷம்

      சூரியன் உதய காலத்தில் எந்த ராசியில் இருக்கிறானோ, அதுவே உதய லக்னம் என்று கூறப்படும். மேற்படி உதய லக்ன நாழிகை ஒவ்வொரு நாளும் சூரியோதய காலத்தில் குறைந்துகொண்டே வரும். அதாவது, தமிழ் மாதமான சித்திரை மாதத்தின் முதல் தேதியன்று சூரிய உதய காலத்தில் மேஷ ராசியில் இருப்பு 13-வது அட்சாம்சத்தைச் சேர்ந்த சென்னைக்கு 4-29 என்றால் 2-ஆம் தேதி மேஷத்தின் இருப்பு 4-20. இம்மாதிரி ஒவ்வொரு தேதிக்கும் சூரிய உதய காலத்தில் 0-9 விநாடி வீதம் கழித்துக்கொண்டே போக வேண்டும்.  இது பஞ்சாங்கத்தில் ராசி இருப்பு என்ற தலைப்பில் இருக்கும்.
      அப்படிக் கழித்தது போக மீதி நாழிகை விநாடியே உதய லக்ன சேஷமாகும்.

    4. ஜந்ம லக்னம்
    5. பிறகு ஜனன கால நாழிகை விநாடிகள் வரும்வரை ஒவ்வொரு ராசியாகக் கூட்டிக்கொண்டே போனால், எந்த ராசிப் பிரமாணத்தில் ஜனன கால நாழிகை அடங்குமோ அதுவே அந்தக் குழந்தையின் ஜன்ம லக்னம் என்று அறிய வேண்டும்.

      லக்னம் கணிக்கும் வழி

      இந்தக் குழந்தை பிறந்தது தை மாதம் 9-ஆம் தேதி இரவு. ஆகையால் தை மாதம் 9-ஆம் தேதிக்குச் சரியாக (தை மாதத்திற்குரிய) மகர ராசியின் சேஷத்தைப் பஞ்சாங்கத்தில் உள்ளபடி குறித்துக் கொள்ளவேண்டும். அதன் கீழ் கும்பம் தொடங்கி ஜனன கால நாழிகை வரும் வரையில் ராசிமான சங்கியைகளை எழுதிக் கூட்டிக் கொள்ள வேண்டும். அதாவது: தை 9-ஆம் தேதி சூரிய உதயத்தில்-

      (உதய லக்னம்)                                நா-வி

      மகர சேஷம்

      --

      3-32

      கும்பம்

      --

      4-17

      மீனம்

      --

      4-11

      மேஷம்

      --

      4-29

      ரிஷபம்

      --

      5-04

      மிதுனம்

      --

      5-27

      கடகம்

      --

      5-22

      சிம்மம்

      --

      5-08

      கன்னி

      --

      5-04

      துலாம்

      --

      5-16

      விருச்சிகம்

      --

      5-28

      தனுசு ஆரம்ப நாழிகை

      --

      53-18

      தனுசு – 5-19 சேர்த்து

      --

      58-37



      ஜனன கால நாழிகையான 57-33, மேற்கண்ட தனுசு ராசி வரையிலுள்ள 58-37க்கு உட்பட்டிருப்பதால், இந்தக் குழந்தை தனுர் லக்னத்தில் பிறந்ததாகும். அதாவது குழந்தையின் ஜன்ம லக்னம் தனுசு என்று அறிய வேண்டும். இனி அந்தக் குழந்தையின் ஜன்ன காலத்தில் கிரகங்கள் எந்த பாதசாரத்தில் இருந்தன என்பதைக் கவனிப்போம்:
      பஞ்சாங்கத்தில் கிரகபாதசாரங்கள் என்னும் அட்டவணையில் கண்டபடி, தை மாதம் 9-ஆம் தேதி கிரகங்கள் கீழ்க்கண்ட வகையில் நக்ஷத்திர பாதங்களில் சஞ்சரிக்கின்றன:

      கிரகம்

      நக்ஷத்திரம்

      பாதம்

      ராசி

      நவாம்சம்

      சூரியன்

      உத்திராடம்

      4

      மகரம்

      மீனம்

      சந்திரன்

      விசாகம்

      2

      துலாம்

      ரிஷபம்

      செவ்வாய்

      மூலம்

      4

      தனுசு

      கடகம்

      புதன்

      உத்திராடம்

      3

      மகரம்

      கும்பம்

      குரு

      மூலம்

      1

      தனுசு

      மேஷம்

      சுக்கிரன்

      மூலம்

      1

      தனுசு

      மேஷம்

      சனி

      பூராடம்

      2

      தனுசு

      கன்னி

      ராகு

      உத்திரம்

      3

      கன்னி

      கும்பம்

      கேது

      உத்திரட்டாதி

      1

      மீனம்

      சிம்ஹம்


    6. நவாம்ச லக்னம்
    7. நவாம்ச லக்னம் என்பது ஜன்ம லக்னத்தில் 9-ல் ஒரு பங்கு என்று பொருள். அதாவது ஜன்ம லக்னம் தனுசு, அதன் நிராயன ராசிமானம் சென்னைக்கு 5 நாழி 19 விநாடி அல்லது 319 விநாடி. இதை 9-ஆல் வகுக்க ஒரு பாகம் 35 4/9. குழந்தை பிறந்த நேரம் 57 நாழி 33 விநாடி. தனுர் லக்னம் ஆரம்பம். 53 நாழி 18 விநாடி. தனுர் லக்னம் பிறப்பு வரை சென்றது 57 நாழி 33 விநாடி – 53 நாழி 18 விநாடி (57-33—53-18) 4 நாழி 15 விநாடி அல்லது 255 விநாடி. இதை 35 4/9-ஆல் வகுக்க 8-வது பாகத்தில் அமையும். ஆக நவாம்ச லக்னம்-மேஷம் முதல் கணக்கிட விருச்சிக லக்னம் வரும்.
      35) 255 (7
            245
           ------
            10
           ------
      மற்ற லக்னங்களுக்கு நவாம்ச லக்னம் போடுவது எப்படி என்பதைக் கீழே விளக்கியுள்ளோம்.

      மேஷம், சிம்மம், தனுசு

      --

      ஜன்ம லக்னமானால் - மேஷம் முதல் கணக்கிட வேண்டும்

      ரிஷபம், கன்னி, மகம்

      --

      ஜன்ம லக்னமானால் - மகம் முதல் கணக்கிட வேண்டும்

      மிதுனம், துலாம், கும்பம்

      --

      ஜன்ம லக்னமானால் - துலாம் முதல் கணக்கிட வேண்டும்

      கடகம், விருச்சிகம், மீனம்

      --

      ஜன்ம லக்னமானால் - கடகம் முதல் கணக்கிட வேண்டும்

    8. ஜந்மநக்ஷத்திரம் ஆத்யந்தம்
    9. இனி ஜன்ம நட்சத்திரத்தின் ஆதியந்த நாழிகைகளையும் ஜனனகால தசாசேஷத்தையும் கணிப்போமாக :
      மாதம் 9-ஆம் தேதி வெள்ளிக்கிழமை சூரியோதயத்திலிருந்து 29-27 நாழிகை வரை சுவாதி நக்ஷத்திரம் இருக்கிறது. பிறகு விசாக நக்ஷத்திரம் ஆரம்பம். ஜாதகன் சூரிய உதயாதி 57 நாழிகை 33 விநாடிகளுக்குப் பிறந்திருப்பதால் சுவாதி கழிந்து விசாக நக்ஷத்திரத்தில் ஜனனம் என்று தெரிகிறது. இனி விசாக நக்ஷத்திரத்தின் ஆத்யந்த பரம நாழிகை – அதாவது மொத்த நாழிகை என்ன என்று தெரிந்தால் தசாசேஷம் கணிக்கலாம். ஒரு தினத்துக்கு 60-00 நாழிகைகள். அதில் 9-ஆம் தேதி சுவாதி இருப்பு 29-27 போக, அன்றைய தினம்-

      விசாக நக்ஷத்திரம் 30-33.

           மறுநாள் தை 10-ஆம் தேதி விசாகம் (பஞ்சாங்கத்தில் உள்ளபடி) 25-42. ஆகையால், இவைகள் இரண்டையும் கூட்ட விசாகம் மொத்த நாழிகை 36-15 ஆகும்.

      ஜனன நாழிகை

      57-33

      அன்று சுவாதி செல்லு

      29-27

      9-ஆம் தேதி விசாகத்தில் செல்லு

      28-06

      விசாகம் மொத்தம் (அ) ஆத்யந்த பரம நாழிகை

      56-15ல்

      28-06ஐக் கழிக்க

      ஜனன காலத்தில் விசாகம் இருப்பு

      28-09


    10. ஜனனகால தசாசேஷம்
    11. ஆகையால், மேற்கண்ட விசாக நக்ஷத்திரத்தின் சேஷம் 28 நாழிகை, 9 விநாடிகளுக்கு தசாசேஷம் கணிக்க வேண்டும்.
      முன்பு குறிப்பிட்டபடி விசாக நட்சத்திரத்துக்கு குருதசை ஆரம்பம். குரு தசை 16 வருஷங்கள். விசாக நட்சத்திரம் மொத்தம் நாழிகை 56-15க்கு 16 வருஷங்களானால் விசாகத்தில் மீதியுள்ள 28-09க்குத் தசாசேஷம் என்ன என்பதைக் கீழ்க்கண்ட விதமாகக்  கணிக்கலாம்.

      அதாவது,

      1.

      விசாகம் மொத்த நாழிகை

      56-15 X 60

       

       

      3360 விநாடிகள்
      15

      மொத்தம்

      3375 விநாடிகள்

      2.

      விசாகம் செல்லு போக இருப்பு

      28.09 X 60

       

      1680
           9

      1689 விநாடிகள்

       

           விசாகம் குருவின் நக்ஷத்திரம். ஜனன காலதசை குருதசை. ஆகவே, மேற்கண்ட இருப்பு விநாடிகளைக் குரு தசா வருஷமான 16ஆல் பெருக்க வேண்டும். அந்த மொத்தத்தை விசாகம் மொத்த விநாடிகளால் வகுக்க தசாசேஷ வருடங்கள் வரும். மீதியை 12-ஆல் பெருக்கி மொத்த விநாடிகளால் வகுத்தது மாதம். 30-ஆல் பெருக்கி வகுத்தது நாட்கள். இவ்விதமாக தசா சேஷம் வரும்.

                 1689 X16
                ------------
      3375)   27024     (8 வருடம்
                  27000
                  ---------------
                        24 X 12 / 3375 = 0 மாதம்
                        ----------
                         288 X 30
                -------------------
      3375)   8640  ( 2 + 1 =3 நா.
                  6750
                  ------
                  1890 பாதிக்குமேல் இருப்பதால் 1 ஆகச் சேர்த்துக் கொள்ளலாம்.
                  ---------
      ஆக, ஜனன காலத்தில் குருதசை சேஷம் 8 வருடம்  0 மாதம் 3 நா. அதாவது இந்தக் குழந்தை கர்ப்பத்தில் இருக்கும்போதே விசாக நட்சத்திரத்தில் பாதி பாகம் கழிந்துவிட்டபடியால், அதற்கு உரிய குருதசை 16 வருஷத்தில் சுமார் பாதி கழிந்து 8 வருஷம் 3 நாட்கள் மாத்திரமே பாக்கி இருக்கின்றன.

    பஞ்சாங்கம் பார்ப்பது எப்படி?

    இப்படி பஞ்சாங்கம் பார்த்து பலன் சொல்ல நாமும்  கொஞ்சம் கற்றுக் கொள்வோமே!

    சில அடிப்படைத் தகவல்கள்:

    ஆண்டுகளைக் கணக்கிட நமது முன்னோர் சுழற்சி முறையில் அறுபது ஆண்டுகள் திரும்பத் திரும்ப வருவதாகக் கணக்கிட்டுத் தந்துள்ளனர்.

    வான் மண்டலத் தொகுதி அல்ல ராசி மண்டலத் தொகுதி ஒரு வட்டப் பாதையாக 360 பாகைகளைக் கொண்டு விளங்குகிறது. நாம் முக்கியமானவை என்று கொண்டுள்ள 27 நக்ஷத்திரங்களும் இப்பாதையில் அமைந்துள்ளன. இதன் வழியாகவே ஒன்பது க்ரஹங்களும் சஞ்சரிக்கின்றன. 360 பாகைகளில் 12 ராசிகள் அடங்கியுள் ளன. எனவே ஒவ்வொரு ராசியும் 30 பாகைகளைக் கொண்டுள்ளது. சூரியன் வான் பாதையில் தினசரி 1 பாகை செல்கிறது.

    ஒருமுறை சுற்றிவர 365 நாள் 6 மணி நேரம் ஆகிறது.

    குரு சுமார் ஒரு வருடத்தில் ஒரு ராசியைத் தாண்டும். சனி மாதத்துக்கு ஒரு பாகை நகரும். எனவே குரு ஒரு தடவை வான வட்டத்தைச் சுற்றி வர 12 வருடங்கள் ஆகின்றன. சனி ஒரு தடவை வான வட்டத்தைச் சுற்றி வர 30 வருடங்கள் ஆகின்றன.

    சனியும் குருவும் சேர்ந்து அசுவதி நக்ஷத்திரத்தில் அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை காணப்படுகிறது. அதுவே பிரபவ வருடம்-இதுவே முதல் வருடம். இதிலிருந்து 60 வருடங்கள் கணக்கிடப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டின் பெயரும் காரணப் பெயராக அமைந்துள்ளது.

    ஆண்டுகள் 60

    1.பிரபவ

    2.விபவ

    3.சுக்கில

    4.ப்ரமோதூத

    5 ப்ரஜோத்பத்தி

    6.ஆங்கிரஸ

    7. ஸ்ரீமுக

    8.பவ

    9.யுவ

    10.தாது

    11.ஈசுவர

    12.வெகுதான்ய

    13.ப்ரமாதி

    14.விக்கிரம

    15.விஷு

    16.சித்ரபானு

    17.சுபானு

    18.தாரண

    19.பார்த்திப

    20.விய

    21.ஸர்வஜித்

    22.ஸர்வதாரி

    23.விரோதி

    24.விக்ருதி

    25.கர

    26.நந்தன

    27.விஜய

    28.ஜய

    29.மன்மத

    30.துர்முகி

    31.ஹேவிளம்பி

    32.விளம்பி

    33.விகாரி

    34.சார்வரி

    35.ப்லவ

    36.சுபகிருது

    37.சோபகிருது

    38.குரோதி

    39.விசுவாவசு

    40.பராபவ

    41.ப்லவங்க

    42.கீலக

    43.சௌமிய

    44.சாதாரண

    45.விரோதிகிருது

    46.பரிதாபி

    47.ப்ரமாதீ

    48.ஆனந்த

    49.ராக்ஷஸ

    50.நள

    51.பிங்கள

    52.களயுக்தி

    53.சித்தார்த்தி

    54.ரௌத்ரி

    55.துன்மதி

    56.துந்துபி

    57.ருத்ரோத்காரி

    58.ரக்தாக்ஷி

    59.குரோதன

    60.அக்ஷய

    தமிழ்மாதங்கள்

    சௌரமான ஆண்டுக் கணக்கீட்டில் மாதம் என்பது ஸூர்யன் ஒரு ராசியைக் கடக்க எடுத்துக் கொள்ளும் 30 நாட்களாக கணக்கிடப்பட்டுள்ளது.

    ஸூர்யன் எந்த ராசியில் என்று பிரவேசிக்கிறானோ அதுவே மாதத்தின் தொடக்க நாளாகவும் அந்த ராசியின் பெயரே மாதத்தின் பெயராகவும் உள்ளது.

    ஸங்கல்பத்தில் நாம் மாதத்தின் பெயரைக் கூறும்போது இந்தப் பெயர்களையே பயன்படுத்துகிறோம். ஆனால் நடைமுறையில் தமிழ் மாதங்களின் பெயர்கள்-அந்த மாதத்தில் எந்த நக்ஷத்திரத்தன்று பௌர்ணமி திதி வருகிறதோ அந்த நக்ஷத்திரத்தின் பெயரையே கொண்டதாக அமைந்துள்ளது.

    மாதங்களின் பெயர்கள்

    நடைமுறைப் பெயர் ஸங்கல்பத்தில் கூற வேண்டியது

    சித்திரை - மேஷ மாசம்

    வைகாசி - ரிஷப மாசம்

    ஆனி -  மிதுன மாசம்

    ஆடி - கடக மாசம்

    ஆவணி -  சிம்ம மாசம்

    புரட்டாசி - கன்னி மாசம்

    ஐப்பசி - துலா மாசம்

    கார்த்திகை -விருச்சிக மாசம்

    மார்கழி - தனுர் மாசம்

    தை -மகர மாசம்

    மாசி - கும்ப மாசம்

    பங்குனி - மீன மாசம்

    * எந்த மாசத்தில் பூர்ணிமை, அமாவாஸ்யை இல்லையோ அந்த மாஸத்துக்கு விஷமாசம் என்று பெயர்.

    * எந்த மாசத்தில் இரண்டு பூர்ணிமையோ, இரண்டு அமாவாஸ்யையோ வருகிறதோ அதற்கு மலமாசம் என்று பெயர்.

    * விஷ மாசத்திலும், மல மாசத்திலும் சுபகார்யங்களை விலக்க வேண்டும்.

    * ஆனால் சித்திரை, வைகாசி, மாதத்தில் இவை நிகழுமானால் அந்த இரு மாதங்களுக்கும் இந்த தோஷம் கிடையாது.

    அயனங்கள்

    ஒரு வருடம் இரண்டு அயனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஸூர்யன் மகர ராசியில் பிரவேசிக்கும்போது உத்தராயனம் தொடங்குகிறது. கடக ராசியில் பிரவேசிக்கும் போது தக்ஷிணாயனம் தொடங்குகிறது.

    தைமாதம் தொடங்கி ஆனி ஈறாக 6 மாதங்கள் உத்தராயன காலமாகும். இக்காலகட்டத்தில் எல்லா நல்ல காரியங்களும் செய்யலாம். கும்பாபிஷேகம், க்ரஹப்பிரவேசம் போன்றவை இக்காலகட்டத்தில் நிகழ்வது உத்தமம்.

    ஆடி மாதம் தொடங்கி மார்கழி ஈறாக 6 மாதங்கள் தக்ஷிணாயனம் ஆகும். இக்காலகட்டத்தில் நல்ல காரியங்களைத் தொடங்குவதை தவிர்க்க முடியுமானால் தவிர்ப்பது நல்லது.

    ருதுக்கள் - 6

    ஒரு வருடம் 6 ருதுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

    சித்திரை, வைகாசி - வஸந்த ருது

    ஆனி, ஆடி, - க்ரீஷ்ம ருது

    ஆவணி, புரட்டாசி - வர்ஷ ருது

    ஐப்பசி, கார்த்திகை - சரத் ருது

    மார்கழி, தை - ஹேமந்த ருது

    மாசி, பங்குனி - சிசிர ருது

    கிழமைகள் - 7

    ஒரு நாள் என்பது 60 நாழிகைகள் கொண்டது. ஸூர்ய உதயத்திலிருந்து மறுநாள் ஸூர்யோதயம் வரை ஒரு நாளாகும்.

    சாயா க்ரஹங்கள் இரண்டு நீங்கலாக மீதமுள்ள ஏழு க்ரஹங்களுக்குரியதாக ஏழு நாட்கள் கொண்ட கால அளவு ஒரு வாரம் என்று தமிழில் அறியப்படுகிறது.

    ஒரு நாளைக்குரிய பெயராக வாஸரம் என்ற சொல் ஸங்கல்பத்தில் பயன்படுத்தப்படுகிறது.

    நடைமுறைப் பெயர் ஸங்கல்பத்தில் கூற வேண்டியது

    ஞாயிறு - பானு வாஸரம்

    திங்கள் - இந்து வாஸரம்

    செவ்வாய் -  பௌம வாஸரம்

    புதன் -  ஸௌம்ய வாஸரம்

    வியாழன் - குரு வாஸரம்

    வெள்ளி - ப்ருகு வாஸரம்

    சனி - ஸ்திர வாஸரம்

    திதிகள் - 15

    ஸூர்யன் இருக்குமிடம் முதல் 12 பாகைகள் சந்திரன் நடப்பினில் ஒரு திதியாகும்.

    1. ப்ரதமை

    2. த்விதியை

    3. த்ருதியை

    4. சதுர்த்தி

    5. பஞ்சமி,

    6. ஷஷ்டி

    7. ஸப்தமி

    8. அஷ்டமி

    9. நவமி

    10. தசமி

    11. ஏகாதசி

    12. துவாதசி

    13. த்ரயோதசி

    14. சதுர்த்தி

    15. பூர்ணிமா (அல்லது) அமாவாஸ்யை

    மாதம் என்பது இருபக்ஷங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அமாவாஸ்யை அடுத்த பிரதமை முதல் பௌர்ணமி வரை சுக்லபக்ஷம் என்றும் பௌர்ணமியை அடுத்து வரும் பிரமை முதல் அமாவாஸ்யை வரை கிருஷ்ணபக்ஷம் என்றும் வழங்கப்படுகிறது.

    தமிழில் இதனை வளர்பிறை என்றும் தேய்பிறை என்றும் கூறுகிறோம்.

    திதி, வாரம், நக்ஷத்திரம், யோகம். கரணம் என்பவையே பஞ்சாகத்திள்ள ஐந்து அங்கங்களாகும்.

    இவற்றில் திதி, வாரம், (வாஸரம்) ஆகிய இரண்டினைப் பற்றியும் மேலே கண்டோ ம். இனி மற்ற மூன்றினையும் அறிவோம்.

    நக்ஷத்திரங்கள் - 27

    வான் வட்டப்பதையில் உள்ள நக்ஷத்திரங்கள் இருபத்தேழும் பன்னிரண்டு ராசிகளுக்குப் பங்கிடப்பட்டிருக்கின்றன.

    நக்ஷத்திரங்கள் 27 - ம் வருமாறு:

    நடைமுறைப் பெயர் ஸங்கல்பத்தில் கூற வேண்டியது

    அஸ்வதி - அஸ்வினி

    பரணி -அபபரணீ

    கார்த்திகை - க்ருத்திகா

    ரோகிணி - ரோகிணீ

    மிருகசீர்ஷம் - ம்ருகசிரோ

    திருவாதிரை - ஆர்த்ரா

    புனர்பூசம் - புனர்வஸூ

    பூசம் - புஷ்யம்

    ஆயில்யம் -  ஆஸ்லேஷா

    மகம்  -  மகா

    பூரம் - பூர்வபல்குனி

    உத்திரம் - உத்ரபல்குனி

    ஹஸ்தம் - ஹஸ்த

    சித்திரை - சித்ரா

    சுவாதி - ஸ்வாதீ

    விசாகம் - விசாகா

    அனுஷம் - அனுராதா

    கேட்டை - ஜ்யேஷ்டா

    மூலம் - மூலா

    பூராடம் - பூர்வ ஆஷாடா

    உத்திராடம் - உத்ர ஆஷாடா

    திருவோணம் - ச்ரவண

    அவிட்டம் - ஸ்ரவிஷ்டா

    சதயம் - சதபிஷக்

    பூரட்டாதி - பூர்வப்ரோஷ்டபதா

    உத்திரட்டாதி - உத்ரப்ரோஷ்டபதா

    ரேவதி - ரேவதி

    ராசிகள் - 12

    1. மேஷம் 2. ரிஷபம் 3. மிதுனம் 4. கடகம் 5. சிம்மம் 6. கன்னி

    7. துலாம் 8. விருச்சிகம் 9. தனுசு 10. மகரம் 11. கும்பம் 12. மீனம்

    மேலே சொன்ன நக்ஷத்திரங்கள் இருபத்தி ஏழும் ஒவ்வொரு ராசிக்கும் 2 1/4 நக்ஷத்திரம் விதம் பங்கிடப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு நக்ஷத்திரத்துக்கும் நான்கு பாதங்கள் உண்டு. ஆகவே, ஒவ்வொரு ராசியிலும் ஒன்பது பாதங்கள் அல்லது 2 1/4 நக்ஷத்திரங்கள் உண்டு.

    யோகங்கள் - 27

    1. விஷ்கம்பம் 2. ப்ரீதி 3. ஆயுமான்

    4. சௌபாக்யம் 5. சோபனம் 6. அதிகண்டம்

    7. சுகர்மம் 8. த்ருதி 9. சூலம்

    10. கண்டம் 11. வ்ருத்தி 12. துருவம்

    13. வியாகாதம் 14. ஹர்ஷணம் 15. வஜ்ரம்

    16. ஸித்தி 17. வ்யதீபாதம் 18. வரியான்

    19. பரீகம் 20. சிவம் 21. ஸித்தம்

    22. ஸாத்தியம் 23. சுபம் 24. சுப்ரம்

    25. பராம்யம் 26. மாஹேந்த்ரம் 27. வைத்ருதி

    கரணங்கள் - 11

    1. பவம் - சிங்கம்

    2. பாலவம் - புலி

    3. கௌலவம் - பன்றி

    4. தைதிலம் - கழுகு

    5. கரம் - யானை

    6. வணிஜை - எருது

    7. பத்ரம் - கோழி

    8. சகுனி - காக்கை

    9. சதுஷ்பாதம் - நாய்

    0. நாகவம் - பாம்பு

    11. கிமுஸ்துக்னம் - புழு

    இராகு காலம்

    ஒவ்வொரு கிழமையிலும் இராகு காலம் எப்போது என்பதனை நினைவில் வைத்துக் கொள்ள ஒரு வரிப்பாட்டு ஒன்று சொல்லுவார்கள். அதனை மனதில் கொண்டு கணக்கிட்டுச் சொல்லலாம்.

    திருவிழா சந்தையில் வெளியில் புகுந்து விளையாட செல்வது ஞாயமா?

    கிழமை = இராகு காலம்

    ஞாயிறு = 04.30 - 06.00

    திங்கள் = 7.30 - 9.00

    செவ்வாய் =  03.00 - 04.30

    புதன் = 12.00 - 01.30

    வியாழன் =  01.30 - 03.00

    வெள்ளி = 10.30 - 12.00

    சனி = 09.00 - 10.30

    எமகண்டம்

    இதேபோல எமகண்ட காலம் எப்போது என்பதனை அறிய ஒரு வரிப்பாட்டு உண்டு.

    விழாவுக்கு புதிதாக சென்று திரும்பும் ஞாபகம் சற்றும் வெறுக்காதே

    கிழமை : எமகண்டம் :: பகல் பொழுதில்

    ஞாயிறு : 12.00 - 01.30

    திங்கள் : 10.30 - 12.00

    செவ்வாய் : 09.00 - 10.30

    புதன் : 07.30 - 09.00

    வியாழன் : 06.00 - 07.30

    வெள்ளி : 03.00 - 04.30

    சனி : 01.30 - 03.00

     

    கிழமை : எமகண்டம் :: இரவுப் பொழுதில்

    ஞாயிறு : 06.00 - 07.30

    திங்கள் : 03.00 - 04.30

    செவ்வாய் : 1.30 - 03.00

    புதன் : 12.00 - 01.30

    வியாழன் : 10.30 - 12.00

    வெள்ளி : 09.00 - 10.30

    சனி : 07.30 - 09.00

    இராகு காலம், எமகண்டம் ஆகிய நேரங்களில் சுபச் செயல்களை நீக்க வேண்டும். குளிகை காலத்தில் அசுபச் செயல்களை நீக்க வேண்டும்.

     

    குளிகை

    கிழமை = குளிகை நேரம் :: பகல் பொழுதில்

    ஞாயிறு = 03.00 - 04.30

    திங்கள் = 01.30 - 03.00

    செவ்வாய் = 12.00 - 01.30

    புதன் = 10.30 - 12.00

    வியாழன் =  09.00 - 10.30

    வெள்ளி = 07.30 - 09.00

    சனி = 06.00 - 07.30

     

     

    கிழமை = குளிகை நேரம் :: இரவுப் பொழுதில்

    ஞாயிறு = 09.00 - 10.30

    திங்கள் = 07.30 - 09.00

    செவ்வாய் = 06.00 - 07.30

    புதன் = 03.00 - 04.30

    வியாழன் =  01.30 - 03.00

    வெள்ளி = 12.00 - 01.30

    சனி = 10.30 - 12.00

     

    ராசிகள் - Tamil Signs

    நட்சத்திரங்கள் - Tamil Stars

    மேஷம் - Aries

    அசுவினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் முடிய - Aswinini, Barani, upto 1st phase of Krithikai

    ரிஷபம் - Taurus

    கிருத்திகை 2ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரீஷம் 2ஆம் பாதம் முடிய - From Krithikai II phase, Rohini and upto Mirukasheerisham II phase.

    மிதுனம் - Gemini

    மிருகசிரீஷம் 3ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3ஆம் பாதம் முடிய - From Mirugasheerisham III phase

    கடகம் - Cancer

    புனர்பூசம் 4ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய - From Punarpoosam 4th Phase, Poosam, and upto Ayilyam

    சிம்மம் - Leo

    மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் முடிய - Makam, Pooram, and upto Uthiram I phase

    கன்னி - Virgo

    உத்திரம் 2ஆம் பாதம் முதல், அஸ்தம், சித்திரை 2ஆம் பாதம் முடிய - From Uthiram II phase, Astham, and upto Chithirai II phase

    துலாம் - Libra

    சித்திரை 3ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3ஆம் பாதம் முடிய - From Chithirai 3rd phase, Swathi, and upto Vishaakam 3rd phase

    விருச்சிகம் - Scorpio

    விசாகம் 4ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய - From Vishaakam 4th phase, Anushyam, and upto Keattai

    தனுசு - Sagittarius

    முலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம் முடிய - From Moolam, Pooradam and upto Uthiraadam 1st Phase

    மகரம் - Capricorn

    உத்திராடம் 2ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2ஆம் பாதம் முடிய - From Uthiraadam 2nd phse, Thiruvonam and upto Avittam 2nd phase

    கும்பம் - Aquarius

    அவிட்டம் 3ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3ஆம் பாதம் முடிய - From Avittam 3rd phase, Sathayam and upto Poorattathi 3rd phase

    மீனம் - Pisces

    பூரட்டாதி 4ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய - From Poorattathi 4th phase, Uthiraadam and upto Revathi.


    காதல் ராசி பலன்

    காதலிப்பவர்களுக்கும் மட்டும்

    பொதுவாக ஜோதிடம் காதலுக்கு எதிரியாக பார்க்கிறார்கள் , இது உண்மை அல்ல , ஜோதிடம் உண்மையை தான் சொல்லும் , www.sriparamanantham.yolasite.com உங்கள் உண்மையான காதலுக்கு மிகவும் உதவியாக இருக்கும், உங்கள் தாய் , தந்தை சம்மதத்துடன் உங்கள் காதல் வெற்றி பெற வாழ்த்துகிறோம்

    காதலிப்பவர்கள் முதலில் சரியானவரை காதலிக்கிறார்களா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அது ரொம்ப முக்கியம். காதலிப்பது யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் காதலிக்கலாம். அது நல்லவர்களுக்கும் வரும், கெட்டவர்களுக்கும் வரும். 3 வருட காதல் முடிந்து போவதும் உண்டு. 30 வருடம் காதலித்து கல்யாணம் செய்து கொள்பவர்களும் உண்டு. பொதுவாக ஏழரை சனி வரும்போதுதான் காதலிக்கிறார்கள். பலரும் அஷ்டமத்து சனி, அர்தாஷ்டம சனி வரும்போது காதலிக்கிறார்கள்.

    பொதுவாக தசா புக்தி சரி இல்லாத காலக்கட்டத்தில்தான் காதலிக்கிறார்கள். சரி இல்லாத தசா புக்தி, சரி இல்லாத நேரத்தில் காதலிப்பவர்களின் காதல் நீடிக்காது. சனி இருக்கும் வரை காதலிப்பார்கள். அது முடிந்தவுடன் காதலும் முடிந்துவிடும். அதன்பிறகு ஒரு தெளிவு வரும். மோசமான தசா புக்தி இல்லாத காலக்கட்டத்தில் காதலிப்பவர்களின் காதல் மட்டுமே நீடிக்கும். அந்தக் காதல் தான் கடைசி வரை நீடிக்கிறது. அவர்கள் கணவன் – மனைவியாகி நல்ல குழந்தைகளைப் பெற்று கடைசி வரை அதே காதலோடு வாழ்ந்து காட்டுகிறார்கள். இதே சனி திசையில் வரும் காதல், மோசமான நேரத்தில் வரும் காதல் சரியாக கனியாது.

    அதனால் எந்த தசை நடக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். அதைப் பொறுத்து காதல் நீடிக்குமா? நீடிக்காதா என்பதை தீர்மானிக்க வேண்டும். காதலிக்கும் போது கண்ணே, மணியே என்று கொஞ்சிக் கொண்டு, கல்யாணத்திற்குப் பிறகு பார்க்கக் கூடப் பிடிக்காமல் விலகிப் போகுபவர்களையும் நாம் பார்க்கிறோம். எந்த காலக்கட்டத்தில் நமக்கு காதல் உருவாகிறது என்பதைப் பார்த்து அந்தக் காதல் எப்படி முடியும் என்பதை நிச்சயமாகக் கூறலாம்.

    உங்கள் ராசிக்கு காதல் எப்படி இருக்கும் ?.

    மேஷம்

    இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்.

    ரிஷபம்

    ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்..

    மிதுனம்

    மிதுன ராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ, நடிப்புத் துறையில் இருந்தாலோ அவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பர். மிதுன ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். எதிர்பாலரிடம் ஆர்வம் எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். காதல் ஏற்படுவது இவர்களுக்கு அரிதே. மிதுன ராசிக்காரர்களுக்கு துலாம் ராசிக்காரர்களுடன் நல்ல தாம்பத்யம் அமையும். இவர்களை மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் கவர்வர். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.

    கடகம்

    இவர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீதே அன்பு செலுத்தலாம். உணவையும், தாம்பத்யத்தையும் இவர்கள் சமமாக கருதுவர். கடக ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் சுய மரியாதையையும், யதார்த்தத்தையும் இழக்க நேரிடும். கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லது

    சிம்மம்

    சிம்ம ராசிக்காரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. இவர்களது இதயத்தில் பல விஷயங்கள் இருக்கும். இவர்களது மனதில் இருக்கும் காதல் சிறப்பாக இருந்தாலும், இவர்கள் சிறந்த காதலராக இருக்க மாட்டார்கள். ஒருவரை விட்டுவிட்டு மற்றொருவரை காதலிக்கும் மனப்பாங்கு இருக்கும். எது சரி எது தவறு என்று தெரிந்திருந்தும் அதனை திருத்திக் கொள்ள மாட்டார்கள். ரொமான்டிக் எண்ணம் அதிகம் இருக்கும். சிம்ம ராசிப் பெண்கள் தங்களது கணவருடன் இனிமையான காதல் வாழ்க்கையை வாழ்வர். சிம்ம ராசிக்காராகள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பர். காதலில் சிம்ம ராசிக்காரர்கள் திறமையாக செயல்பட மாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை இவர்களது எண்ணப்படி நடக்கும்

    கன்னி

    கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் விருப்பமுடையவர்கள். இந்த ராசி இருப்பவர்கள் நல்ல குனம் உடையவர்கள். ஆனால் இந்த குணம் உடையவர் லட்சியத்தை கடைபிடிக்க மாட்டார்கள். இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும்,மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரக் கூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும்.

    துலாம்

    எப்போதும் அடாவடியாக பேசிக் கொண்டிருக்கும் துலாம் ராசிக்காரர்கள், யாரும் எதிர்கொள்ளாத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்வர். இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்தது அல்ல. காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது.துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார். ஆனால் அவரிடம் சிறந்த குணமிருக்காது. விருட்சிக ராசிக்காரருடன் துலாம் ராசிக்காரர் காதல் கொண்டால் மிகச் சிறப்பாக இருக்கும்.

    விருச்சிகம்

    விருட்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். தான் பழகுபவர்களிடல் உள்ள எல்லா நல்ல குணத்தையும் கற்றுக் கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பார். பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால் இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும். இவர்களது வயது ஆக ஆக காதல் எண்ணம் அதிகரிக்கும். தன்னையே விரும்புபவராகவும், ஒரு சில நேரங்களில் தன்னையே வெறுப்பராகவும் இருப்பார்.எப்போதும் உற்சாகமாக இருப்பார். காதல் மற்றம் தாம்பத்ய வாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார். இளமை பருவத்தில் சிறிது தடுமாறினாலும், தனது ஆழ்ந்த சிந்தனையால் தடுமாற்றத்தில் இருந்து விடுபடுவார். துணையை சந்தேகிக்கும் குணம் இருக்கும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகவும், அமைதியாகவும் இருப்பர்.

    தனுசு

    இவர்கள் காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாளியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார். ஒரு சமயம் அமைதியாகவும், ஒரு சமயம் ஆக்ரோஷமாகவும் காணப்படுவார். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார். அவரின்பால் அதிக அன்பு செலுத்துவார்.தனுசு ராசிக்காரர்கள் மேஷம் / மிதுனம் ராசிக்காரர்களுடன் திருமணம் செய்தல் நலம். மேஷ ராசிக்கார்களுடன் காதல் வயப்படுவர்

    மகரம்

    இவர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. யாரையும் நம்பிவிடுவர். தனுசு ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக காதல் அனுபவம் இருக்கும். மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது

    கும்பம்

    கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். ஆனால் காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர். இவர்களுடைய கற்பனை மிக வித்தியாசமாக இருக்கும். புரிந்து கொள்வதும், புரிந்திருப்பதுமே காதல் என்று நம்புவர். காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும். கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பாலருடன் ஏற்படும் ஈர்ப்பு சில சமயம் விபரீதத்திலும் முடியும். உயர்ந்த பதவியில் அமர்ந்த பின்னர் உங்கள் காதலை தெரிவிப்பது உத்தமம்.

    மீனம்

    மீன ராசி காரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். எப்பொழுதும் அவர்களின் வாழ்க்கையில் வெற்றி நிலைபெற்றிருப்பதில் மீனராசிக் காரர்களின் ஸ்பாவம் எப்பொழுதும் காம இச்சை கொண்டவராக இருக்கும். இவர்கள் இயற்கையை விரும்புவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார். எப்பொழுதும் நற்குணங்களை கொண்டவர். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி யோசிப்பது கிடையாது. இந்த ராசிக் காரர்களே யோசித்து எல்லா காரியங்களையும் நடத்தி முடிப்பார். இந்த ராசிக் காரர் உணர்ச்சியை தரக் கூடிய செயல்களை செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர். அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்கவும் முடிவு செய்பவர். இவர்களுக்கு கன்னி ராசிக் காரர்களுடன் திருமணம் நடக்க வாய்ப்புண்டாகும்

     

     

    நவரத்தினம்

    பொருளாதாரத்தின் அளவுகோலாக பிளாட்டினம், தங்கம், வெள்ளி உலோகங்கள் இருந்தாலும் அவைகளை காட்டிலும் மதிப்புமிக்கவைகளாக நவரத்தினங்கள் உள்ளது. இறைவனின் அருளாசி பெற பலவழிகள் இருங்கின்றன, அவைகளில் நவரத்தினம் அணிவதும் ஒரு முறையாக எடுத்துக்கொள்ளலாம் என்பது எனது கருத்து (இதில் முறன்பாடுள்ளவர்கள்-மன்னிக்கவும்)
    தற்பொழுது நவரத்தினம் அணிவதை பெரும்பாலனவர்கள் விரும்புகின்றனர், அவர்களின் நட்சத்திரத்தின் அடிப்படையில் தெரிவு செய்ய வேண்டிய நவரத்தினக்கல் தகவல் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
    தங்களுக்கு உகந்த கல்லை கடையில் வாங்க அத்துறையில் அநுபவம் மிக்க ஒருவரின் துணையுடன் கல்லில் குறைபாடு(தோஷம்) இல்லாமல் தெரிவு செய்ய வேண்டும்

    நவரத்தினங்களை ஒருசேர நவரத்தின மோதிரமும் அனியலாம்

    Star No
    வ.எண்

    Gem Stone
    நவரத்தினம்

    Gem Stone Name
    நவரத்தினம் பெயர்

    Your Star
    உங்களின் நட்சத்திரம்

    Ruling Planet
    இராசி நாதன்

    Chandrashtamam
    சந்திராஷ்டமம்

    1

    Cats eye

    Cats Eye
    வைடூர்யம்

    Aswani
    அஸவினி

    Decending Node
    Kethu
    கேது

    Anusham
    அனுஷம்
    2

    Dimond வைரம்

    Diamond
    வைரம்

    Bharani
    பரணி

    Venus
    Sukkaran
    சுக்கிரன்

    Kettai
    கேட்டை
    3

    Ruby

    Ruby
    மாணிக்கம்

    Kirthika
    கிருத்திகை

    Sun
    Suryan
    சூர்யன்

    Moolam
    மூலம்
    4

    Pearl முத்து

    Pearl
    முத்து

    Rohini
    ரோகினி

    Moon
    Chandran
    சந்திரன்

    Pooradam
    பூராடம
    5

    Red Coral

    Red Coral
    பவழம்

    Mirugasirtham
    மிருகசீருஷம்

    Mars
    Angaragan
    செவ்வாய்

    Uthiradam
    உத்திராடம
    6

    Hessonite

    Hessonite
    கோமேதகம்

    Thiruvathirai
    திருவாதிரை

    Ascending Node
    Ragu
    ராகு

    Thiruvonam
    திருவோணம
    7

    Yellow Sapphire

    Yellow Sapphire
    புஷ்பராகம்

    PoonarPoosam
    புனர்பூசம்

    Jupiter
    Guru
    குரு

    Avittam
    அவிட்டம
    8

    Blue Sapphire

    Blue Sapphire
    நீலம்

    Poosam
    பூசம்

    Saturn
    Sani
    சனி

    Sathayam
    சதயம
    9

    Emerald

    Emerald
    மரகதம்

    Ailyam
    ஆயில்யம்

    Mercury
    Budha
    புதன்

    Poorattahi
    பூரட்டாதி
    10

    Cats eye

    Cats Eye
    வைடூர்யம்

    Magam
    மகம்

    Decending Node
    Kethu
    கேது

    Uthirattathi
    உத்திரட்டாதி
    11

    Dimond வைரம்

    Diamond
    வைரம்

    Pooram
    பூரம்

    Venus
    Sukkaran
    சுக்கிரன்

    Revati
    ரேவதி
    12

    Ruby

    Ruby
    மாணிக்கம்

    Utiram
    உத்திரம்

    Sun
    Suryan
    சூர்யன

    Aswani
    அஸவினி
    13

    Pearl முத்து

    Pearl
    முத்து

    Astam
    அஸ்தம்

    Moon
    Chandran
    சந்திரன்

    Bharani
    பரணி

    14

    Red Coral

    Red Coral
    பவழம்

    Chitrai
    சித்திரை

    Mars
    Angaragan
    செவ்வாய்

    Kirthika
    கிருத்திகை

    15

    Hessonite

    Hessonite
    கோமேதகம்

    Swati
    சுவாதி

    Ascending Node
    Ragu
    ராகு

    Rohini
    ரோகினி

    16

    Yellow Sapphire

    Yellow Sapphire
    புஷ்பராகம்

    Visakam
    விசாகம்

    Jupiter
    Guru
    குரு

    Mirugasirtham
    மிருகசீருஷம

    17

    Blue Sapphire

    Blue Sapphire
    நீலம்

    Anusham
    அனுஷம்

    Saturn
    Sani
    சனி

    Thiruvathirai
    திருவாதிரை

    18

    Emerald

    Emerald
    மரகதம்

    Kettai
    கேட்டை

    Mercury
    Budha
    புதன

    PoonarPoosam
    புனர்பூசம
    19

    Cats eye

    Cats Eye
    வைடூர்யம

    Moolam
    மூலம்

    Decending Node
    Kethu
    கேது

    Poosam
    பூசம்
    20

    Dimond வைரம்

    Diamond
    வைரம்

    Pooradam
    பூராடம்

    Venus
    Sukkaran
    சுக்கிரன்

    Ailyam
    ஆயில்யம
    21

    Ruby

    Ruby
    மாணிக்கம்

    Uthiradam
    உத்திராடம்

    Sun
    Suryan
    சூர்யன

    Magam
    மகம்
    22

    Pearl முத்து

    Pearl
    முத்து

    Thiruvonam
    திருவோணம்

    Moon
    Chandran
    சந்திரன்

    Pooram
    பூரம
    23

    Red Coral

    Red Coral
    பவழம்

    Avittam
    அவிட்டம்

    Mars
    Angaragan
    செவ்வாய்

    Utiram
    உத்திரம
    24

    Hessonite

    Hessonite
    கோமேதகம்

    Sathayam
    சதயம்

    Ascending Node
    Ragu
    ராகு

    Astam
    அஸ்தம
    25

    Yellow Sapphire

    Yellow Sapphire
    புஷ்பராகம்

    Poorattahi
    பூரட்டாதி

    Jupiter
    Guru
    குரு

    Chitrai
    சித்திரை
    26

    Blue Sapphire

    Blue Sapphire
    நீலம்

    Uthirattathi
    உத்திரட்டாதி

    Saturn
    Sani
    சனி

    Swati
    சுவாதி
    27

    Emerald

    Emerald
    மரகதம்

    Revati
    ரேவதி

    Mercury
    Budha
    புதன

    Visakam
    விசாகம்

    நவரத்தினம் வாங்க சிறந்த நாட்கள்
    பொதுவாக திங்கள், புதன், வியாழன், வெள்ளி மற்றம் சனிக்கிழமைகளே சிறந்தவை
    ஜென்ம நட்சத்திரம், தங்கள் நட்சத்திரத்திற்கு உகந்த நல்ல முகூர்த்த நாள்
    சுப ஹோரை மிக முக்கியம்
    சந்திராஷ்டமம் உடைய தினங்களை அறவே தவிர்க்கவும், தங்களின் சந்திராஷ்டம நட்சத்திரம் இங்கு தரப்பட்டுள்ளது

    நவரத்தினம் அனியும் முன்னர்
    அன்றைய தினம் காலை ஆதரவற்ற இல்லத்திற்கு தங்களால் இயன்ற உதவி செய்யவும்
    நவரத்தினத்தை அதற்குறிய கிரகத்தின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து வழிபடவும்
    தாய், தகப்பனார் கைகளினால் அணிவித்தல் நன்று

    நவரத்தினம் அணிய உகந்த நாள்
    தங்கள் நட்சத்திரத்திற்கு உகந்த நாள்
    7, 8 ஆம் இட சுத்தியுட லக்னம்
    அஸ்வினி,
    ரோகினி, மிருகசீருடம், பூசம், அஸ்தம், சித்திரை, அனுஷம், ரேவதி ஆகியவை சிறந்த நட்சத்திரங்கள்
    வளர்பிறையில் வரும் பஞ்சமி, சஷ்டி, தசமி, ஏகாதசி, பௌர்னமி திதிகள்
    ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் இலக்னம் நன்று

     

    விநாயகரின் மூல மந்திரம்




    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே
    வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா

    இருபத்தெட்டு அட்சரங்களை உடைய இம்மந்திரம் பலவிதமான சக்திகளையும், சித்திகளையும் அளிக்கவல்லது.செல்வம், பூமி, ஆகர்ஷணம், வசியம், குண்டலி வின்யாசம் முதலிய அனேக சித்திகள் இம்மந்திர ஜபத்தால் கைகூடும்.

    அருகம்புல், தாமரை, வில்வதளம், செவ்வரளி போன்ற நறுமணம் உடைய புஷ்பங்களால் விநாயகரை பூஜை செய்தால் செல்வச் செழிப்பும் ஞானவளமும் கைகூடும். செல்வத்திறவுகோலாக இம்மந்திர உபாசனை நிகழ்ந்து வந்துள்ளது.

    கணபதியை மட்டும் வழிபடுபவர்கள் கணபதி உபாசகர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.கணபதி உபாசகர்கள் கருப்பு, நீலம் போன்ற வண்ண ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.சிவப்பு, பொன் வண்ண உடைகள் மிகவும் ஏற்றவை. துளசியை இவர்கள் கிள்ளக் கூடாது.துளசியை விநாயகருக்கு அணிவிக்கக்கூடாது.

    கணபதி மந்திரங்களை பிரம்ம முகூர்த்த வேளை எனப்படும் அதிகாலை 4.30 முதல் 6.00க்குள் ஜபிப்பது மிக நன்று என கணேச உத்தர தாயினி உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.

    விநாயகரை தேய்பிறை சதுர்த்தி தோறும் வழிபடுவது சங்கடகர சதுர்த்தி என்று வழங்கப்படும்.அதுவும் அந்நாளில் வன்னிமரத்தடியில் வழிபடுவது மிக நன்று. மாசி மாதம் வரும் சதுர்த்தி செவ்வாய்க்கிழமையன்று(தகுந்த ஜோதிடரை அணுகி உரிய நாளை அறிக) துவங்கி ஓராண்டு சங்கடஹர சதுர்த்தியை மாதந்தோறும் பின்பற்றிவர வேண்டும்.இதனை செவ்வாய்க் கிரக அதிபதி பின்பற்றினார்.

    உச்சிஷ்ட கணபதி மந்திரம்

    ஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய
    ஹஸ்தி முகாய,லம்போதராய
    உச்சிஷ்ட மகாத்மனே ஆம் ஹ்ரேம் ஹ்ரீம்
    கம் கேகே ஸ்வாஹா

    வேப்பங்குச்சி, ஊமத்தம்பூ,நெய் இவைகளால் இவருக்கு ஹோமம் செய்ய வேண்டும்.


    கடன் தீர கணபதி மந்திரம்

    ஓம் கணேசருணம் சிந்தி வரேண்யம் ஹீம் பட்ஸ்வாஹா
    ஹே பார்வதி புத்ரா ருணம் நாசம் கரோதுமே
    ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் அபீஷ்ட சித்திம்மே தேஹி சரணாகத வத்ஸல
    பக்த்யா ஸமர்ப்பயே துப்யம் ஸ்வாஹா
    ஸ்ரீசக்ரேசாய ஸ்ரீமகா கணபதயே ஸ்வாஹா

    கருங்காலி குச்சியால் கணபதி ஹோமம் செய்ய எவ்வளவு பெரியளவில் கடன் இருந்தாலும் அது மிக விரைவாக தீர்ந்துவிடும்.(நமது நாட்டின் கடன் தீர யாராவது இதைச் செய்யலாமே!!!)

    மஹாஹஸ்தி விநாயகர்

    பெரிய்ய்ய துதிக்கையை உடைய இவர் பெரும் தனத்தை (அதாவது கோடிக்கணக்கில் ரூபாய்களாக) அள்ளி வீசுபவராக இருக்கிறார்.
    அப்படி நமக்க இவரது அருள் கிடைக்க பின்வரும் மந்திரத்தை லட்ச உருவேற்றினால் போதும்.நமது பாவங்களும் தீரும்.செல்வமும் ஞானமும் நமக்குக் கிடைத்துவிடும்.

    ஓம் ஆதூன இந்த்ர க்ஷீமந்தம் சித்ரம் க்ராபம் ஸ்ங்க்ருபாய
    மஹாஹஸ்தி தக்ஷ்ணேன

    வாஞ்சா கல்பலதா கணபதி

    நமது சகல விருப்பங்களையும் அள்ளி வழங்குவதால் இவருக்கு வாஞ்சை கணபதி என்ற பெயர் ஏற்பட்டது.

    பின்வரும் மந்திரம் 100 கோடி சூரியனுக்குச் சமமானதாகும். தகுந்த குரு உபதேசம் மூலமாக இந்த மந்திரத்தை தினமும் ஜபித்துவரவும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும்.

    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம்
    ஐம் கஏஈ லஹ்ரீம்
    தத்ஸவிதர் வரேண்யம் கணபதயே
    க்லீம் ஹஸகஸல ஹ்ரீம் பர்க்கோ தேவஸ்யதீமஹீ
    வரவரத சவு ஸஹல ஹ்ரீம்
    த்யோயோநப்ர சோதயாத்
    ஸர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹா






    வாஸ்து சாஸ்திரம் ஒரு விஞ்ஞானமே

           நமது முன்னோர்கள் அனுபவப்பூர்வமாக உணர்ந்து அதன் அடிப்படையில் எழுதப்பட்ட ஒன்றுதான் வாஸ்துசாஸ்திரமாகும்

    1. சமையலறையை ஏன் அக்னிமுலையில் வைக்கவேண்டும்?
          வாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டின் சமையலறை அக்னிமூலையில் கட்ட  வேண்டும்  அப்படி வைக்காமல் வீட்டின் நடுவே சமையலறையை வைத்தால் சமையல் வாசனையும் அதிலிருந்து வரும் புகையும் வீட்டுக்குள்ளேயே இருக்கும். வெளியே போகாது. அதைச் சுவாசிப்ப வர்களுக்கு சுவாச நோய் வரும். மேலும் வீட்டின் நடுப்பாகத்தில் சமையலறை இருந்தால் திடீரென தீ பிடித்தால் வீட்டுக்குள் இருப்பவர்கள் வெளியே வரமுடியாது தீ விபத்தில் சிக்கிக் அவஸ்தைபடுவார்கள். அதனால்தான் நமது முன்னோர்கள் நன்கு யோசித்து வீட்டின் சமையலறை இந்த இடத்தில்தான் இருக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

    2. சமையலறையை ஏன் கிழக்குப்பக்கத்தில் வைக்கவேண்டும்?
        சமையலறையை கிழக்குப் பக்கத்தில் வைத்தால் சூரிய வெளிச்சம் 
    நன்றாக வீட்டில் பரவும். காற்றும் புகையும் எளிதில் ஜன்னல் வழியாக வெளியே  போகும்.வீட்டில் நன்கு சூரிய வெளிச்சம் பரவுவதால் புழு,பூச்சி. கிருமி போன்ற சிறு உயிரினங்கள் இறந்துபோகும். மேலும் வடகிழக்குப் பகுதியிலிருந்து வரும் காற்று வீட்டுக்குள் புகுந்து நல்ல காற்றோட்ட வசதியை உண்டுபண்ணும் இதன்முலம் வியாதிகள்  பரவுவது தடுக்கப்டுகிறது

    3. தண்ணீரும் குப்பைகளும் வெவ்வேறு இடத்தில் இருக்க வேண்டும் என வாஸ்து சாஸ்திரம் ஏன் சொல்கிறது?
         ஈசான மூலையில் தான் ஆழ்குழாய், கிணறு ஆகியவற்றை அமைக்க வேண்டும் அதுதான்  நல்லது. வீட்டின் தென்மேற்கு மூலையைக் குப்பைகள். கழிவுகள் போடும் இடமாக அமைக்க வேண்டும்..   கழிவுகளும் தண்ணீரும் ஒரே இடத்தில் இருந்தால் வியாதி பரவும். அதனால் தணணீரும் குப்பைகளும் வெவ்வேறு இடத்தில் இருக்க வேண்டும். அதுதான் நல்லது
    4. வீட்டின் கீழ்தளத்தில் அதிகமான சன்னல்களும் மேல் தளத்தில் குறைவான சன்னல்களும் வைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் ஏன் சொல்கிறது?

        கீழே நிறைய கட்டிடங்களும் பல மரங்களும் உள்ளது. அவைகள் நமது வீட்டிற்குள்ளே காற்று நிறைய வருவதை தடை செய்கிறது. அதனால் கீழ்தளத்தில் அதிகமான சன்னல்கள் வைக்க வேண்டும் அப்படி வைத்தால் தான் நிறைய காற்று நமது வீட்டில் பரவும். மேல் தளத்தில் குறைவான சன்னல்கள் இருந்தாலே போதுமானது

    5. தொழிற்சாலையின் மெயின் வாசல் வடகிழக்கில்  இருக்கவேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் சொ்ல்ல காரணம் என்ன?
         தொழிற்சாலையின் மெயின் வாசல் வடகிழக்கில் இருந்தால்  காற்று நிறைய வரும். அதனால் வடபாகத்தில் குப்பைகளைப் போடாமல் காலியாக விடவேண்டும். மாறாக குப்பை போட்டால் காற்று அடித்து குப்பபை யாவும்  தொழிற் சாலைக்குள்ளேயே வந்துவிடும். 

         தொழிற் சாலையின் தென்கிழக்குப் பாகத்தில் புகைக் கூண்டு வைக்கவேண்டும். அப்படி வைத்தால் வடகிழக்குப் பகுதியில் இருந்து காற்று வீசுகிறபோது  புகைக்கூண்டிலிருந்து வெளிவரும் புகை தொழிற்சாலைக்குள் வராது. வேறு பகுதிக்குச் சென்றுவிடும். 
        தொழிற்சாலைகளில் வேலை பார்பவர்கான குடியிருப்பு வீடுகளை தொழிற்சாலையின் வடமேற்கு பகுதியில் அமைக்கவேண்டும் இந்த வடமேற்கு பகுதி சந்திரனைச் சார்ந்தது அதனால் மன அமைதி ஏற்படும்

         தொழிற்சாலையின் மேல்கூரையில் விழக்கூடிய மழைத் தண்ணீர் கிழக்கு அல்லது மேற்குப் பக்கம் இறங்கும்படி செய்ய வேண்டும். தென்மேற்கில் இறங்கினால் அங்குள்ள குப்பை மற்றும், கழிவுப் பொருட்களுடன் மழைத் தண்ணீர் கலந்து பல தீய விளைவுகளை உண்டாக்கும்




    சுனாமி நிலநடுக்கம் கலகம் போராட்டம் தீவிரவாதம் ஆகியவற்றை ஜோதிடர்கள் முன்கூட்டியே அறிந்து இருந்தும் அதுகுறித்து தெரிவிக்காமல் மௌனமாக இருப்பது ஏன்?

    சுனாமிநிலநடுக்கம்கலகம்போராட்டம்தீவிரவாதம் ஆகியவற்றை ஜோதிடர்கள் முன்கூட்டியே அறிந்து இருந்தும் அதுகுறித்து தெரிவிக்காமல் மௌனமாக இருப்பது ஏன்?

    கலகம், சுனாமி, தீவிரவாதம், நிலநடுக்கம், போராட்டம் போன்றவற்றினால் உயிர்கள் மொத்த மொத்தமாக பலியாவதை முன்கூட்டியே ஜோதிடம் மூலம் சில ஜோதிடர்கள் கண்டிப்பாக அறிந்து இருப்பார்கள் ஆனால் அவர்கள் வெளியே சொல்வதில்லை. இதற்கான காரணங்களாக நான் கருதுவது 

    1. சந்தேகம்: தன்மேல் தனக்கே நம்பிக்கை இல்லாமல் போவது. நமக்கு ஏன் வம்பு. ஒருவேளை நாம் சொன்னது பலிக்காமல் போய்விட்டால் அப்புறம் நாம் எது சொன்னாலும் மக்கள் நம்ப போவதில்லை. நமது ஜோதிட தொழிலே காலி. அதனால நாம் வாய மூடிக்கிட்டு கம்முனு இருப்போம் என்று சில ஜோதிடர்கள் நினைப்பது.எங்கே தாம் தவறாக கணிதம் செய்கிறோமோ என்ற சந்தேகம் வேறு. அப்புறம் நடந்துவிட்ட பின்னர் பார்த்தியா! நான் அப்பவே பக்கத்து வீட்டில் அப்படி சொன்னேன். இங்கு இப்படி சொன்னேன். அதுபடி நடந்து விட்டது என்று சொல்லும் ஜோதிடர்களும் உள்ளனர். இவர்கள் அக்கம்பக்கம் மட்டும் தனக்கு நெருக்க மானவர்களிடம் மட்டும் உண்மையை சொல்லியிருப்பார்கள். ஆனால் பகிரங்கமாக அறிவித்து இருக்கமாட்டார்கள். சந்தேக மனநிலை கொண்டவர்கள் இவர்கள். 

    2. பாதுகாப்பின்மை : நிலநடுக்கம் வந்து அதனால் சுனாமிவரும் என்று சில சமயங்களில் அரசே எச்சரிக்கை விட்டுள்ளது. ஆனால் சுனாமி வரவில்லை. ஆனால் இதேமாதிரி ஜோதிடர்கள் அறிக்கைவிட்டால் வதந்தியை பரப்புதல் அல்லது பீதியை கிளப்புதல் ஆகிய பிரிவின் கீழ் குற்றம் சுமத்துவார்களோ என்ற பயமும் காரணமாக இருக்கலாம்.பிளாக்கில் இச்செய்திகளை போட்டால் எங்கே சைபர் கிரைம் என குற்றம் சுமத்துவார்களோ என்ற சந்தேகமும காரணமாக இருக்கலாம். ஜோதிடர்கள் தங்களது கருத்துக்களை சொல்வதற்கு பாதுகாப்பு தேவை. பாதுகாப்பு இல்லாமையால் போராட்டம், தீவிரவாதம் பற்றி முன்கூட்டியே அறிய முடியாமல் போகிறது. இது குறித்து சட்ட நிபுணர்கள் இங்கே கமணட் பகுதியில் ஆலோசனை தந்தால் நல்லது.

    3. சில ஜோதிடர்களுக்கு தெரியும். ஆனால் சொல்லமாட்டார்கள் எல்லாமே இயற்கையாக நடப்புது நாம் சொல்லி தடுக்கவா முடியப்போகுது. சொல்வதனால் எந்த பிரயோசனமும் இல்லை என்று நினைப்பது. இப்படிப்பட்ட ஜோதிடர்கள்தான் தங்களது வாடிக்கை யாளர்களுக்கு என் ஆயுள் எப்படி உள்ளது என்று கேட்டால் ஆயுள் குறைவாக இருந்தாலும் கூட ரெம்ப தீர்க்கமாக இருக்கு என்று சொல்வார்கள். சில வீட்டில் கணவன் மனைவி பல காரணங்களினாலும் பிரிந்து போயிருப்பார்கள் ஆனால் சேரவே முடியாதபடி ஜாதகம் இருக்கும். ஆனால் ஜோதிடர்கள் உண்மையை மறைத்து சீக்கிரம் சேருவீர்கள் 
    இவ்வளவு காலம் கழித்து சேர்விர்கள். இன்னன்ன பரிகாரம் செய்யுங்கள் என்று சொல்வார்கள். ஏனென்றால் இவர்கள் வாடிக்கையாளர்களை சோகத்தில் ஆழ்த்த விரும்பமாட்டார்கள். வாடிக்கையாளர் மனம் சந்தோஷத்துடன் செல்லட்டும் என்றே நினைப்பார்கள். எப்பொழுது குழந்தை பிறக்கும் என்று கேட்டாலும் இந்த மாதிரியே வேண்டுமென்ற உண்மையை மறைத்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியோடு 
    அனுப்பும் ஜோதிடர்களும் உள்ளனர். இந்த மாதிரி ஜோதிடர்கள் இருப்பதனால் கலகம், தீவிரவாதம் பற்றி முன்கூட்டியே அறிய முடியாமல் போகிறது.

    4. சில ஜோதிடர்களுக்கு இந்த உலகத்தில் நிறைய உயிர் இழப்புகள் வரப்போவது தெரியும். ஆனால் எந்த நாட்டில் எந்த பகுதிகளில் என்பது தெரியாமல் இருக்கும். இதற்கு காரணம் அவர்களுக்கு பூகோள அறிவும் சரித்திர அறிவும் இல்லாமல் ஜோதிட அறிவுமட்டும் இருந்திருக்கும். இப்படி பல காரணங்கள் இருப்பதால் நாம் நிலநடுக்கம், சுனாமி, கலகம், தீவரவாதம் , போராட்டம் போன்ற காரணங்களால் உயிரிலப்பு ஏற்படவதை முன்கூட்டியே அறிய முடியாமல் போகிறது


    பாலஜோதிடத்தில் வந்துள்ள கட்டுரைச்சுருக்கம்

    விக்ருதி வருடம் பிறந்த 14.4.2010 முதல் 26.12.2012 வரையிலும் சனி,செவ்வாய்,புதன் மற்றும் குருவின் சஞ்சாரச்செயல்பாடுகளால் உலகின் பெரும்பகுதிகள் ஆழிப்பேரலை எனப்படும் சுனாமி,பூகம்பம்,கடல் மட்டம் உயருதல் போன்றவற்றால் அழியப்போகிறது.
    இந்தியாவில் தமிழ்நாட்டின் கடலோரப்பகுதிகள்,சென்னை,விசாகப்பட்டினம், இலங்கை,பசிபிக் பெருங்கடலின் ஓரத்தில் இருக்கும் ஜப்பான்,இந்தோனோஷியா,அமெரிக்கா,கனடா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் பெருமளவில் பாதிக்கப்படப்போகின்றன.
    இந்த பேரழிவினால் சில நாடுகளின் பொருளாதாரம் அடியோடு நாசமாகும்.சில நாடுகள் உலக அரசியலில் இருந்து நிரந்தரமாக தனது பிடியை கைவிட்டுவிடும் எனஒரு ஜோதிடர் கணித்துள்ளார்.

    காதலில் உங்கள் குணம் எப்படி? எண் ஜோதிடம்

    காதலில் உங்கள் குணம் எப்படி?
    ஒருவரின் பிறந்த ஆண்டு + மாதம் + தேதி =
    உ+ம் 2.2.1969 2 + 2 + 1 + 9 + 6 + 9 + = 29
    இதையும் பிரித்துக் கூட்ட வேண்டும் 2 + 9 = 11
    1+1=2 இதுதான் இவருடைய காதல் எண்
    {love number}

    எண் ஒன்று - பெண்ணுக்குரிய குணம்
    வாழ்கையை நுனிக்கரும்பு வரை சுவைத்திட ஆர்வமுள்ளவர். வரப்போகும் கணவன் தன்னைவிட எல்லா அம்சங்களிலும் உயர்ந்து நிற்க வேண்டுமென்று எதிர்பார்ப்பவர். அப்படிப்பட்டவரை ஆதாரனை செய்யத் தவறமாட்டீர்கள். லட்சியப்போக்கும், சாதுர்யமும், நகைச்சுவையும் நிரம்பியவர்.

    எண் ஒன்று - ஆணுக்குரிய குணம்
    மனைவியிடத்தில் விசுவாசத்தோடும், பெருந்தன்மையோடும், நன்றியுணர்ச்சியோடும் இருப்பீர்கள். மனைவியின் செயல்களில் குறைக் கண்டுபிடிப்பதைத் தவிர்த்து விடுங்கள். அதுவே, உங்கள் வாழ்க்கையை சொர்க்கம் போல் மாற்றிவிடும்.

    எண் இரண்டு - பெண்ணுக்குரிய குணம்
    கணவர் எள் கொண்டு வா என்றால் எண்ணெய் இதோ என்று சொல்லும் சுபாவம் உடையவர். அடிக்கடி உணர்ச்சிகளுக்கு அடிமையாகும் தொட்டாற்சிணுங்கி நீங்கள். உங்கள் ஒவ்வொரு பணியையும், உங்கள் அலங்காரத்தையும், உங்கள் கணவர்{அ} காதலர் வாய் நிறைய மெச்ச வேண்டுமென்று எதிர்பார்பபவர். நீங்கள் நல்ல நகைச்சுவை நிரம்பியவர். நீங்கள் இருக்குமிடத்தில் எப்பொழுதும் கலகலப்புத்தான்.

    எண் இரண்டு - ஆணுக்குரிய குணம்
    நீங்கள் ஒரு காதல் மன்னன். அதோடு உங்கள் காதலியின் முறையீடுகளை அனுதாபத்தோடு கேட்டு, தீர்வு காணத் தவறமாட்டீர்கள்.

    எண் மூன்று - பெண்ணுக்குரிய குணம்
    ஆண்மை நிறைந்தவரையே எதிர்பார்ப்பீர்கள். அழகுகூட இரண்டாம் பட்சம்தான். நாகரீகத்தை எதிர்பார்ப்பீர்கள். வீட்டுப் பணியுடன், வெளிப்பணியையும் திறம்பட வகிக்கக்கூடியவர். உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை என்ற பாரதியின் பாட்டுக்கு இலக்கணம் நீங்களேதான்.

    எண் மூன்று - ஆணுக்குரிய குணம்
    ஓர் உத்தம புருஷனின் கல்யாண குணங்கள் அத்தனையும் பொருந்தியவர். எல்லோருக்கும் பரிசுகளையும் பண்டங்களையும் வாரி வழங்கும் கர்ணன். எல்லா விஷயங்களையும் பேதமின்றி விளையாட்டாகவே எடுத்துக்கொள்பவர். சுவையான பேச்சாளர். பொறாமை என்றால் அது என்ன விலையென்று கேட்பவர்.

    எண் நான்கு - பெண்ணுக்குரிய குணம்
    உங்களை நேசிப்பவரிடம் விசுவாசமாகவும், நன்றியுள்ளவராகவும், அனுசரணையுள்ளவராகவும் இருப்பீர்கள். நீங்கள் இருக்குமிடத்தில் கும்மாளமும் வேடிக்கையும் சிரிப்பும் தான்.

    எண் நான்கு - ஆணுக்குரிய குணம்
    குழந்தைகளையும், மனைவியையும் அதிகமாக நேசிப்பவர். விசால மனமும், பெருந்தன்னையும் நிறைந்தவர். உங்கள் மனதை பறிகொடுத்தவருக்காக உயிரைக் கூட தியாகம் செய்யத் தயங்காதவர். பரிபூரண சுதந்திரத்தை வழங்குபவர். உங்களை கணவராக அடைபவர் ரொம்ப கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

    எண் ஐந்து - பெண்ணுக்குரிய குணம்
    பெண்மை பரி பூரணமாக குடிகொண்டுள்ளவர் நீங்கள். உங்களை மனைவியாக அடையப் போகிறவர்கள் ரொம்பவும் அதிஷ்டசாலிதான். உலகை ஒரு சுற்று சுற்றி வர, பேராசை கொண்டவர்.

    எண் ஐந்து - ஆணுக்குரிய குணம்
    பெண்களிடையே நீங்கள் மிகப் பிரபலம். உங்கள் பார்வைக்காக ஏங்கும் பெண்கள் ஏராளம். உங்களின் போக்கு எதிர்த்தரப்பினருக்கு அதிர்ச்சியையும் அளிக்கலாம், ஆனந்த்ததையும் அளிக்கலாம். உங்களுக்கு காதல் வாழ்க்கை ஒரு சவால்தான்!


    எண் ஆறு - பெண்ணுக்குரிய குணம்
    குப்பை மேட்டைக்கூட கோவிலாக்கும் கலை நயம் படைத்தவர். என் கணவர், என் கு்ழந்தைகள்தான் உலகம் என்று வாழ்ந்து காட்டக் கூடிய உண்மையான தாய் நீங்கள். அது அது எங்கு இருக்க வேண்டுமென்பதில் தீவிரம் காட்டுவீர்கள். ஓர் ஆசாதார மனைவி என்பதற்கு உண்டான அத்தனை தகுதிகளையும் கொண்டவர் .

    எண் ஆறு - ஆணுக்குரிய குணம்
    காதல் பவித்திரமானது என எண்ணுபவர். பெண்ணை மலரெனக் கையாளும் பாங்குடையவர். அழகை ஆராதனை செய்யும் அதே சமயத்தில் கவிதைகளையும் எழுதித் தள்ளுவீர்கள். மணாளனே மங்கையின் பாக்கியம் என்ற வாசகம் உங்களுக்காகவேதான்.

    எண் ஏழு - பெண்ணுக்குரிய குணம்
    உடுப்பது, உண்பது, பேசுவது, காதலிப்பது எல்லாமே ஏனோ தானோதான். பணம், பதவி, பகட்டு எல்லாமே உங்களுக்கு அனாவசியம்தான்.... சராசரிப் பெண்ணின் ஆபாசங்களிலிருந்து வேறுபட்டு தனித்து நிற்கும் ஆபூர்வப்பிறவி நீங்கள். எந்த ஒரு விஷயத்திலும் கட்டுப்பாடற்ற தனிக்காட்டு ராணி நீங்கள். வெளிவேஷம் போடத்தெரியாதவர்.

    எண் ஏழு - ஆணுக்குரிய குணம்
    சதா சர்வகாலமும் கற்பனை உலகில் சிறகடித்துப் பறக்கும் பண்புடையவர். அதோடு புத்தகமும் கையுமாய் காரணகாரியத்தில் ஆராய்ச்சில் மூழ்கி விடுவீர்கள். ஒரு பெண் உங்களைக் காதலிக்க நேர்ந்தாலும் அவள் என்னை ஏன் காதலித்தாள், எந்த அம்சம் பிரதானம், எந்த அடிப்படையில் காதலித்தாள் என்ற ஆராய்ச்சியில் மூழ்கி, நேசிக்க வேண்டியதையெல்லாம் கைநழுவ விட்டு விடுவீர்கள். திருமணவாழ்கை வெற்றியடைவது அதிஷ்டத்தைப் பொறுத்த்து.

    எண் எட்டு - பெண்ணுக்குரிய குணம்
    கலை பொருந்திய, கவர்ச்சி நிரம்பிய முகம். முதல் சந்திப்பில் நீங்கள் அகம்பாவம் பிடித்தவர் போல் பழகுவதாக மற்றவர்கள் நினைப்பார்கள். ஆனால் பழகப் பழகத்தான் நீங்கள் இனியவர் என்று உணர்வார்கள். இஷ்டப்பட்டதை அடையத் தவறமாட்டீர்கள். அதிகாரமும், பணமும் உள்ளவரைத் தான் நீங்கள் தேர்தெடுப்பீர்கள். நீங்கள் உணர்ச்சி வசப்படும்பொழுது ஒருவரை இமயமலையின் உச்சியில் கொண்டு உட்காரவும் வைப்பீர்கள்; அவரை அதலபாதாளத்திலும் தள்ளுவீர்கள்.

    எண் எட்டு - ஆணுக்குரிய குணம்
    நல்ல தாம்பத்தியத்துக்கு இடையூராக இருப்பது உங்களின் பொறாமைக் குணம்தான். சமூக‌ அந்தஸ்திலும், பொருளாதார மட்டத்திலும் உயர்ந்து நிற்கும் நீங்கள், சொர்க்க வாழ்க்கை அடைவீர்கள். வெற்றிகளும், தோல்விகளும் அடுக்கடுக்காக எதிர்பட்டாலும், சிறிதும் மனம் தளராமல் லட்சியவாதியாகச் செயல்பட்டு வெற்றியின் சிகரத்தை எட்டிப் பிடித்திடுவீர்கள். நீங்கள் பிறக்கும்பொழுதே சாமர்தியமும், புத்திசாலித்தனமும் உங்களுடன் ஒட்டிக்கொண்டிருந்தால் நீங்கள் வெற்றித் திருமகனாக விளங்குவதில் வியப்பில்லை.

    எண் ஒன்பது - பெண்ணுக்குரிய குணம்
    உங்களுடன் சேர்ந்து வாழும் வாழ்கைதான் சொர்க்கம் என்று உங்கள் கணவர் கூறும் அளவுக்கு நீங்கள் அன்பும் காதலும் மிக்கவர்.

    எண் ஒன்பது - ஆணுக்குரிய குணம்
    எறும்பின் சுறுசுறுப்போடும், லட்சியத்தோடும், உறுதியோடும் செயல்பட்டு அடையவேண்டியதெல்லாம் அடைவீர்கள். எந்தப் பணியை ஒப்படைத்தாலும் திறம் பட நிர்வகித்து நல்ல நிர்வாகி என்ற பாராட்டைப் பெறுவீர்கள். அரசியலில் நுழைந்தால் மக்கள் அபிமானத் தலைவனாக்க கொடி கட்டிப் பறக்கலாம்.

     உங்கள் ராசியின் குணங்கள்

    மேஷ ராசியில் பிறந்தவர் களின் பலன்கள்

    மேஷ ராசியில் பிறந்தவர் களின் பலன்கள் அசுவினை-பரணி-கிருத்திகை 1ம் பாதம் இந்த நக்ஷத்திரங்களில் அதாவது, மேஷராசியில் பிறந்தவர்கள்-பூமி,காணி,நிலபுலங்கள்,வீடு,விவசாயத் தொழிலில் மேன்மை, ஆள்,அதிகாரங்களுடன் இருப்பார்கள். அரசாங்கத்தாரால் கெளரவிக்கப்படுவார்கள். அற்ப ஆசைகள் இல்லாதவராகவும்,வாக்கு வன்மையும்,கோப குணம், முரட்டு சுபாவங்களுடனும்,கம்பீரமான தோற்ற்ங்களுடனும்,தெய்வீக வழிபடுகள்,சாஸ்திர ஆசார அனுஷ்டானங்கள் நிரம்பப் பெற்றவர்களாகவும் இருப்பார்கள். பொன் ஆபரணங்களையும்,பட்டுப் பீடாம்பரங்களையும்,வஸ்திரங்களையும் பெற்றிருப்பார்கள். கல்வியில் திறன் பெற்றிருப்பார்கள். மெலிவான இளைத்த சரீரத்துடன், நீண்ட கழுத்து, கை கால்களுடன் இருப்பார்கள். நீண்ட ஆயுளுடன் திரேக பலத்துடனிருப்பார்கள். மேஷ ராசி என்பது மேடான ராசி என்றும், இந்த ராசியில் பிறந்தவர்கள் மேன்மையான அந்தஸ்துடன், கீர்த்தி செல்வாக்கு,சுகம் இவைகளைப் பெற்றிருப்பார்கள். என்று பொதுவாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது. 

    ரிஷப ராசியில் பிறந்தவர் பலன்

    கிருத்திகை 2,3,4, பாதங்கள், ரோஹிணி,மிருக சீருஷம் 1,2, பாதங்கள் இவைகளாகிய நக்ஷத்திரங்களில் பிறந்தவர்கள்,அதாவது ரிஷிபராசிக்காரர்கள் பருந்த உடலும்,கம்பீரமான தோற்றமும்,மெதுவான செய்கைகளையும் மந்தமான குணங்களுடன்,கல்வி கணிதம் சாஸ்திரங்களை ஓரளவு கற்றும், தேவாலய தெய்வீக வழிபாடுகளுடன்,பக்தி,சிரத்தையுடன் இருப்பார்கள். ஆடை ஆபரணம், நகைகள், செல்வம், முதலியவைகளைப் பெற்றிருப்பார்கள்.

    வேடிக்கையாகப் பேசும் குணங்களுடன், புத்திரர்களிடாத்திலும், மற்றும் குழந்தகளிடத்திலும் பிரியமாகப் பேசியும் பழகும் குணமும் இருக்கும். புளிப்பு,காரம், வஸ்துவில் பிரியம் அதிகம். தாங்கள் தாராள குணத்துடன் செலவு முதலியவைகளைச செய்யாமல், பிறரை செய்யும்படிஸ் சொல்லி, அதனால் பலங்களைத் தாங்கள் பெறுவார்கள்.

    வண்டி வாகனங்களுடன் செல்வத்துடனும்,செல்வாக்குடனும், இவர்கள் 80 வயதுக்கு மேலும் சரீர சுகங்களுடன் இருப்பார்கள். 
     

    மிதுன ராசியில் பிறந்தவர்கள் பலன்

    மிருக சீருஷம் 3,4, பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3 பாதங்களில் பிறந்தவர்கள் மிதுனராசிக்காரர்கள் ஆவார்கள். அதிகமான எண்ணங்களையும், நோக்கங்களையும் பெற்று,கல்வியில் தேர்ச்சியும்,கணிதத்தில் வன்மையும், பேச்சில் சாமர்த்திஉஅத்தையும், ஸ்தா சிரித்துப்பேசும் குணமும் கபடமும் தந்திரங்களும், சுயநலக் காரியவாதிகளாகவும் இருப்பார்கள். தெய்வீக வழிபாடுகளும், ஆசார அனுஷ்டானங்களீல் நம்பிக்கையும், கீர்த்தியையும் பெற்றிருப்பார்கள்.

    நீண்ட திரேகமும் உடலமைப்பையும் கருமை நிறமாகவும், பித்த சம்பந்தமான வியாதிகளுடனும், தைர்யஸ்தர்களாகவும்,இருப்பார்கள். தான் செய்யும் தொழிலில் கண்டிப்பும், கறாரும்,கண்ணியமும் நிறைந்திருக்கும். எழுதுவதில், கலைத்துறையில் ஆர்வமும், திறமையும் பெற்றிருப்பார்கள். செல்வத்துடனும், செல்வாக்குடனும் தங்களது திறமையினால் முன்னேற்றத்தை அடைவார்கள். ஆயுள் 70 வரையில் தீர்க்கமெனக் கூறலாம்.
     

    சிம்ம ராசியில் பிறந்தவர் பலன்

    மகம், பூரம்,உத்திரம்,1-ம் பாதம் ஆகிய நக்ஷத்திரங்களில் பிறந்த சிம்ம ராசிக்காரர்கள், சூரியனைப் போன்று விளங்குவார்கள். தைரியமும்,வாக்குவன்மையும் தெய்வீக தேவாலய வழிபாடுகளுடன், ஆசார அனுஷ்டானங்களிலும் சிறந்து விளங்குவர். கல்வியில் ஊக்கமும் சாஸ்திர ஆரய்ச்ச்சிகளில் தேர்ச்சியும் அடைவர். வேதங்களில் பற்றுதல் இருக்கும். பெரிய மனிதர்களின் நட்பும், சகவாசமும்,அந்தஸ்தும் ஏற்படும்.சமூகத்தில் கீர்த்தியுடனும்,பிரபலத்துடனும், விளங்குவார்கள். உன்னத்ப் பத்வியில் செல்வம்,செல்வாக்கு, ஸ்திர சொத்துக்களுடன் இருப்பார்கள். குடும்பம் சிறப்புடன் இருக்கும். புத்திர பாக்யங்களுடன் வாழ்வார்கள்.

    சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சிவபெருமான் அருளைப் பெற்று இருப்பார்கள்.அதிகமாக உணவு புசிப்பார்கள். வியாதிகள் ஏற்பட்டாலும் உடனே குணமாகும். தொழிலில் ஊக்கத்துடன் விளங்குவார்கள். தன்னுடைய அந்தஸ்துக்குக் குறைவாக இருப்பவர்களிடம் அலக்ஷியத்துடனும்,அதிகாரங்களுடனும், சிறிது கர்வம் கொண்டவர்போல நடந்துகொள்வார்கள். கோபமும், படபடப்பும் தலையெடுத்திருக்கும்.

    சிம்ம ராசியில் பிறந்தவர்கள் கிரஹ பலத்துடன் ஜாதகம் அமைந்திருந்தாஅல் 80 வயதுகளுக்குக் குறைவில்லாமல் நல்ல சுக செள கர்யங்களுடன் இருப்பார்கள். 

    கன்யா ராசியில் பிறந்தவர் பலன்

    உத்திர நக்ஷத்திரம் 2,3,4 பாதங்கள், ஹஸ்தம் சித்திரை 1,2, பாதங்களில் பிறந்த கன்யா ராசிக்காரர்கள் பிரசித்தி கொண்ட குடும்பத்தில் பிறந்தாலும், தரித்திரத்தையும் வறுமையையும் அனுபவிக்க நேரிடும். தெய்வீக வழிபாடுகளில் சிறந்தவர்களாகவும், ஆசார சீலர்களாகவும்,நீதி நேர்மை,பண்புகளுடன் கூடியவர்களாகவும் இருப்பார்கள். எக்காரியங்களிலும் எவ்வித தொழிலிலும் அவ்ர்கள் ஞானத்தைப் பெற்றிருப்பார்கள். சமூக சேவைகள் செய்ய பிரியம் கொண்டவர்களாகவும் தங்களது பிற்காலத்தில் செல்வத்துடனும், செல்வாக்குடனும் சிறப்புடன் விளங்குவார்கள்.ஸ் தானத்ருமங்கள் செய்வதிலும் தன் நிலையையும் மறந்து பிறருக்கு உபகாரங்கள் செய்வதையும் லக்ஷயமாகக் கொண்டிருப்பார்கள். 

    கன்யா ராசியில் பிறனஹ்தவர்களை முக்கியமாக தாயாதிகளும், உற்றார் உறவினர் நண்பர்களும் ஏமாற்றி செல்வத்தையும், பொருளையும் அபகரிப்பார்கள். ஆயினும் கன்யாராசிக்காரர்கள் பொறுமை குணங்களிடன், தங்களது மெதுவான சுபாவத்துடனும், அன்பு கலந்த பேச்சுக்களினாலும் எதிர்காலத்தில் சிறப்பைப் பெறுவார்கள்.

    சுபக்கிரஹங்கள் பார்வையுடனும்,பலத்துடனும் பிறந்த கன்யாராசிக்காரர்கள் சுக செளகர்யங்களுடன் 70 ஆண்டுகாலம் ஜீவித்திருப்பார்கள்.


    துலா ராசியில் பிறந்தவர் பலன்

    சித்திரை நக்ஷத்திரம் 3,4, பாதங்கள், சுவாதி,விசாகம், 1,2,3,பாதங்களில் பிறந்த துலாராசிக்காரர்கள் செல்வம் மிகுந்தகுடும்பத்தில் செல்வாக்குடன் இருப்பார்கள்.நல்ல ஜசுவரியமும்,தனதான்யங்களும்,பூமி காணி வீடு போன்ற சொத்துக்களையும் வண்டி வாகனங்களையும்,மாடு கன்றுகளுடன் பால் பாக்யத்தையும் பெற்று இருப்பார்கள்.

    குடும்பத்தில் அதிகமான நபர்கள் இருப்பார்கள். பெரிய மனிதர்கள், செல்வாக்கு அதிகாரம் உயர்பதவி கொண்டவர்களாகளின் நட்பைப் பெற்றிருப்பார்கள்.தார்மீக குணங்களும், தெய்வ வழிபாடுகளும் நிறைந்து விளங்கும்.ஆசார அனுஷ்டானங்களைச செய்து வருவார்கள்.

    துலா ராசியில் பிறந்தவர்கள் பேச்சில் ஆணித்தரமாகவும், வியாபார நோக்ங்கள் கொண்ட பேச்சாகவும் பேசுவார்கள்.அதிகமாக மற்றவர்களுடன் நெருங்கிப் பழகமாட்டார்கள். தங்கள் குடும்பத்தைவிட்டு மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடமாட்டார்கள். துலா ராசியில் பிறந்த ஆண்களுக்கு இரண்டு மனைவிகள் இருக்கலாம்.

    சுபகிரஹங்கள் பார்வையுடனும்,பலங்களுடனும், பிறந்த துலாராசிக்காரர்கள் ஆயுள் பாவம் 85 ஆண்டுகளுடன் சுக செளகர்யங்கள் நிரம்பப் பெற்று விளங்குவார்கள்.

     

    விருச்சிக ராசியில் பிறந்தவர் பலன்

    விருச்சிகத்தில் பிறந்தவர்கள் படி படியாக முன்னுக்கு வருபவர்கள்.எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.தைரியமாக எந்த செயலையும் செய்வார்கள். பெரிய வேலைகளை தந்திரத்துடன் செய்வார்கள். அடுத்தவர்களிடம் அன்பாக பழகுவார்கள். வாழ்க்கையில் சண்டை சச்சரவுகள் நிறைந்து காணப்படும்.காய்ச்சல் அடிக்கடி வரலாம்.

    தனுர் ராசியில் பிறந்தவர் பலன்:

    மூலம் பூராடம் உத்திராடம் 1-ம் பாதம் ஆகிய நக்ஷத்திரங்களில் பிறந்த தனுர்ராசிக்காரர்கள் ப்ருஹஸ்பதி கிரஹமாகிய குருபகவான் வீட்டில் ஜெனனமாவதால், சிறு வயதிலுருந்தே கல்வி, ஞானம். கொண்டவர்களாகவும் நல்ல சகவாசங்களையும், நீதி நேர்மை பண்பு ஆகிய நல்லொழுக்கங்களைக் கொண்டவர்களாகவும் வளர ஆரம்பிப்பார்கள். தெய்வீக வழிபாடுகள், ஆசார அனுஷ்டானங்கள், பெரியவர்களிடம் பக்தி, விசுவாசகங்களுடன் கூடினவர்களாக இருப்பார்கள்.தனக்கு சமமாகவும், உயர் அந்தஸ்து,பதவி, செல்வாக்கு படைத்தவர்களிடம் நட்பைக் கொள்ளுவார்கள்.கீழோரிடம் வெறுப்பைக் கொள்ளுவார்கள். அதிகமாக வெளியே சுற்றும் பழக்கம் இருக்கும்.

    தனிர் ராசியில் பிறந்தவர்கள் தங்களது கல்வி, அறிவு திறமைகளால் உயர் பத்வியை அரசாங்கத்தில் பெறுவார்கள். அதிகாரங்களுடனும், அந்தஸ்துடனும் இருப்பார்கள். பிறருடைய குற்றங்களை, குணங்களை,வெகு எளிதில் கண்டு கொள்வார்கள்.துர்குணம்,கொலை செய்பவர்கள்,திருடுபவர்கள் இவர்களை வெகு கலகமாகக் கண்டிபிடிப்பார்கள்.

    கிரஹ பலங்களுடன் கூடின தனுர்ராசிக்காரர்கள் அடிமை வாழ்வைப் பெறாமல் 80 ஆண்டுகள் ஆயுள் பாவத்துடன் திடகாத்திர திரேகத்துடன் இருப்பார்கள்

    மகர ராசியில் பிறந்தவர் பலன்:

    உத்திராடம் 2,3,4, பாத்ங்கள்,திருவோணம்,அவிட்டம் 1,2, பாதங்கள் ஆகிய நக்ஷத்திரங்களாகிய மகர ராசியில் பிறந்தவர்கள்,சிவந்த மேனியையும், பெரிய கண்களையும், திரேகத்தில் மச்சங்களையும், நீண்டு உயர்ந்த கம்பீர திரேகக் கட்டையும் பெற்றிருப்பார்கள். கல்வி,கேள்விகளில் பிரகாசத்தையும்,ஆசார அனுஷ்டானங்களில் சிறந்தும்,தெய்வீக வழிபாடுகளை அறிந்தும், இருப்பார்கள்.வாசனைத் திரவியங்களைல் பிரியமும், ஆடைஆபரணங்களில் ஆசைகளும் அந்தஸ்துக்கு ஏற்ற இடங்களில் ஆகாரம் கொள்வதும் யாரையும் லக்ஷியம் செய்யாமல் தன் இஷ்டம் போலக் காரியங்களைச செய்து வெற்றி பெற்று வாழ்வார்கள்.

    மகரராசியில் பிறந்தவர்களில் குடும்பம் செல்வம்,செல்வாக்குடன் கீர்த்தி பெற்று இருக்கும். புத்திர சந்தானங்களுக்கு குறைவிருக்காது.மனவியிடம் அதிகமான பிரியத்துடனும்,மனைவியின் போக்கின்படி நடந்து கொள்ளும் சுபாவத்தையும் பெற்றிருப்பார்கள். தனக்கு நிகர் யாரும் கிடையாது என்ற நோக்கத்துடன் இருப்பார்கள்.

    மகரராசியில் பிறந்தவர்கள் பிறக்கும்போது செல்வந்த குடும்பத்தில் பிறந்து, நடுத்தர வயதில் சில சிரமங்களை அனுபவித்து,பிற்காலத்தில் பெரிய அந்தஸ்தையும், செல்வ சுகங்கலையும், ஸ்திரசொத்துக்கலையும் பெறுவார்கள்.

    கிரஹங்கள் பலத்துடன், பிறக்கும் மகரராசிக்காரர்களுக்கு ஆயுள் பலம் 70 ஆண்டுகளுக்குக் குரைவில்லாமல் இருக்கும.

     


    கும்ப ராசியில் பிறந்தவர் பலன்

    அவிட்டம் 3,4, பாதங்கள், சதயம்,பூரட்டாதி 1,2,3- பாதங்களில் பிறந்த கும்பராசிக்காரர்கள்,மெலிந்த திரேகத்துடனும், குள்ளமாகவும் இருப்பார்கள்.   கல்வியில் ஊக்கமும் ஆசார அனுஷ்டானங்களில் பற்றுதலும்,தெய்வீக வழிபாடுகளில் சிறந்தும் இருப்பார்கள். எவ்வளவு படித்திருந்தாலும் மேதைகளாக இருந்தாலும், பிரபலமாக அமைவது கடினம். சுபக்கிரகப் பார்வை பெற்ற கும்பராசிக்காரர்கள் கீர்த்தி பெறலாம்.பித்த சம்பந்தமான வியாதிகளுடனும்,மற்றவர்களிடம் காணும் சிறு குற்றம் குறைகளையும் அடிக்கடி இழிவாகப் பேசி,பிரசாரம் செய்து வருவார்கள். தன்னைப்பற்றி பெருமையாகத் தாங்களே பேசிக் கொள்வார்கள்.

    கும்பராசியில் பிறந்தவர்கள் மற்றவர்கள் செய்த உபகாரங்களை உடனே மறந்துவிடுவார்கள். பாரபக்ஷம் பார்க்காமல் உடனே தீங்கு செய்வார்கள். பிறர் நன்றாக வாழ்வதைக் கண்டு பொறுக்கமாட்டார்கள்.


    கும்பராசியில் பிறந்தவர்கள் ஸ்திரீ ஜனங்களின் நட்பை வெகு எளிதில் பெற்றுவிடுவார்கள். கிரஹங்களின் பலங்களுடன் பிறக்கும் கும்பராசிக்காரர்கள் 80 ஆண்டுகள் ஜீவித்திருப்பார்கள்.

     

    மீன ராசியில் பிறந்தவர் பலன்:

    பூரட்டாதி 4-ம் பாதம்,உத்திரட்டாதி ரேவதி ஆகிய நக்ஷத்திரங்களில் பிறந்த மீனராசிக்காரர்கள் அழகிய அங்கலக்ஷணங்களுடனும் தோற்றங்களுடனும் இருப்பார்கள்.தான் செய்த காரியங்கள், செய்யப் போகும் காரியங்கள் எதையும் வாய்விட்டு சொல்லமாட்டார்கள். எவரிடமும் மனம்விட்டுப் பழகமாட்டார்கள். பயந்த சுபாவங்களுடன் இருப்பார்கள்.

    மீனராசியில் பிறந்தவர்கள் சுமாரான கல்வி ஞானங்கள் தெய்வ வழிபாடுகள், ஆசார அனுஷ்டானங்கள் இவைகளை அறிந்திருப்பார்கள்.ஆனால் அதை வாழ்க்கையில் கடைப்பிடிப்பார்களா என்பது சந்தேகம். வாசனைத்திரவியங்களிலும்,ஆடை ஆபரணங்களிலும் பிரியம் இருக்கும்.

    மீனராசியில் பிறந்தவர்கள் முன் ஜாக்கிரதையுடன் கூடினவர்களாக இருப்பார்கள். பிறர் பொருளை அப்கரிப்பார்கள். பிறருடைய உதவிகளினாலேயே தங்களது வாழ்க்கையை நடத்துவார்கள். கிரஹபலம் பெற்ற மீனராசிக்காரர்கள் நல்ல செல்வம், செல்வாக்கு சந்தோஷங்களைப் பெற்றிருந்தாலிம் அவர்களுக்கு எதிர்பாராதவிதமான கஷ்டநஷ்டங்கள் உடனேயே ஏற்படும். அனேகமாக சிரம வாழ்க்கையைத்தான் அனுபவிப்பார்கள்.

    மீன ராசியில் பிறந்த ஆண்களுக்கு இரண்டு மனைவிகள் என்று கூறலாம். சிரமமான வாழ்க்கை வசதிகளுடன் 90 ஆண்டுகள் ஜீவித்திருப்பார்கள். புத்திர சந்தானங்கள் நிறைந்து இருப்பார்கள்

     

     கைரேகை சாஸ்திர  ரேகைகள்.



    1: ஆயுள் ரேகை
    2: புத்தி ரேகை
    3: இதய ரேகை
    4:சுக்கிரனின் வட்டப்பாதை
    5: சூரிய ரேகை
    6: புதன் ரேகை
    7: விதி ரேகை

    ஆண்களுக்கு வலக்கை ரேகையையும் பெண்களுக்கு இடக்கை ரேகையையும் பார்க்க வேண்டும் என கைரேகை நிபுணர்கள் கூறி வருகின்றனர் என்பது யாவரும் அறிந்ததே! ஆனால் ஆய்வின்படி, இரண்டு கைகளின் ரேகையையும் பார்த்துத்தான் துல்லியமாக பதில் கூற முடியும். ஆண்களுக்கு இடக்கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு முன்னால் நடந்த பலன்களையும், வலக்கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு பிறகு நடக்கப் போகிற பலன்களையும் கூற வேண்டும். அதுபோல் பெண்களுக்கு வலக் கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு முன்னால் நடந்த பலன்களையும், இடக்கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு பிறகு நடக்கப் போகிற பலன்களையும் கூற வேண்டும். ஓர் ஆடவரின் இடக்கையில் உள்ள ரேகைகளும், மேடுகளும் பலவீனமாக இருக்க, அவரது வலக்கையில் உள்ள ரேகைகளும், மேடுகளும் பலமாக இருந்தால், அவர் 40 வயது வரை பலவிதமான கஷ்டங்களை அனுபவித்து, அதற்கு பிறகு படிப்படியாக தனது வாழ்வில் போராடி வெற்றியடைந்து, நல்ல நிலைமையை அடைவார் எனக் கூற வேண்டும். இரண்டு கைகளில் உள்ள ரேகைகளும், மேடுகளும் பலமாக இருந்தால் அந்த நபர் வாழ்நாள் முழுவதும் நல்ல சந்தோஷமான வாழ்க்கையைப் பெறுவார். ஆண்களுக்கு வலக் கை ரேகை சிறப்பாக இருக்க, இடக்கை ரேகை அம்சங்கள் பலவீனமாக இருந்தால் இவர்களுக்கு 2/3 பங்கு சுப பலனும் 1/3 பங்கு பாவ பலனும் உண்டாகும் என அறிய வேண்டும். இவ்வாறு பெண்களுக்கு இருந்தால் 1/3 பங்கு சுப பலனும் 2/3 பங்கு பாவ பலனும் உண்டாகும். அதாவது ஆண்களுக்கு வலக் கை ரேகையையும், பெண்களுக்கு இடக் கை ரேகையையும் அதிக சக்தி வாய்ந்தது. 

    கைரேகை மேடுகள் 








    மேடுகளின் படி விரல்களையும் குருவிரல் (ஆட்காட்டி விரல்),சனி விரல் (நடு விரல்), சூரிய விரல்(மோதிர விரல்), புதன் விரல் (சுட்டு விரல்) என்கிறார்கள். ஆனால் கட்டை விரலை சுக்கிரவிரல் என்று கூறவில்லை. 
     


    இனி ரேகைகளை பார்ப்போம்...


    விதி ரேகை

    உள்ளங்கையில் மணிக்கட்டு பகுதியில் இருந்து ஒரு ரேகை சனி மேட்டை நோக்கிச்  செல்லும். இதுவே விதி ரேகை அல்லது தொழில் ரேகை ஆகும். இது நமது உழைப்புக்குத் தகுந்த பலனைக் கொடுக்கக் கூடியது. சிலர் கைகளில் இந்த ரேகையே இருக்காது..! இவர்கள் எவ்வளவு தான் கஷ்டப்பட்டுப் பாடுபட்டாலும், பலன் கிடைக்காது. விதி ரேகை தெளிவாக அமைந்து வெட்டுக்குறி, தீவு ஏதும் இல்லாது மணிக்கட்டிலிருந்து சனி மேடு வரை செல்வது நல்லது. இவர்கள் வாழ்நாள் முழுவதும் தொழில் விஷயத்தில் பிரச்சனை ஏதும் இல்லாது நிம்மதியாக வாழ்வர். விதி ரேகையுடன் ஆயுள், புத்தி, இருதய ரேகைகளும் நன்றாக அமைந்திருந்தால், இவர்களுக்கு நல்ல தேக ஆரோக்கியமும் , புத்திசாலித்தனமும் , நல்ல தொழில் விருத்தியும் ஏற்பட இடமுண்டு. இவர்களது எதிர்காலம் சந்தோசமாக அமையும்.

    ஆயுள் ரேகை

    முக்கியமானது..! சிலரது கைகளில் தடிமனாகவும், ஆழமாகவும், சிலரது கைகளில் லேசாகவும் மெல்லியதாகவும் பதிந்திருக்கும். தடிமனான ஆயுள் ரேகை மிருகபலத்தையும், மெல்லிய ஆயுள் ரேகை ஆத்ம பலத்தையும் குறிப்பிடும். தெளிவாகவும், மெல்லியதாகவும், நீளமாகவும் அமைந்த ஆயுள் ரேகை, நல்ல தேக பலத்தையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும். தடிமனான ஆயுள் ரேகை உடையோர் அடிக்கடி சிறு, சிறு உடல் உபாதையால் சிரமப்படுவர். ஆயுள் ரேகை சுக்கிர மேட்டைச் சுற்றி எவ்வாறு அமைந்துள்ளது என்பதை ஆராய வேண்டும், ஆயுள் ரேகை சுக்கிர மேட்டைச் சுற்றி நன்கு விலகியிருந்தால், இவர்களது தேக ஆரோக்கியம் நன்றாகவும் சுக்கிர மேட்டைச் சுற்றி நெருங்கிக் காணப்பட்டால், நோய்  எதிர்ப்புச் சக்தி குறைவாகவும் இருக்கும். ஆயுள் ரேகை குரு மேட்டுப் பக்கம் சற்று உயர்ந்து காணப்பட்டால், இவர்கள் தன்னடக்கம், கட்டுப்பாடு, லட்சிய உணர்வு, உயர்வெண்ணம் கொண்டவர்களாக இருப்பர். ஆயுள்ரேகை கீழ் செவ்வாய் மேட்டிலிருந்து ஆரம்பித்திருந்தால், இவர்கள் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாகவு
    ம், அடக்கமில்லாதவர்களாகவும், சண்டை சச்சரவுகளில் ஈடுபடக்கூடியவர்களாகவும் இருப்பர். ஆயுள் ரேகையிலிருந்து மேல் நோக்கி எழும் ரேகைகள் சிறியதாக இருந்தால், இவர்கள் நல்ல உழைப்பு, உற்சாகம், அதிர்ஷ்டம் உடையவர்களாக இருப்பர்.

    புத்தி ரேகை

    குரு மேட்டின் அடிப்பகுதியில் ஆயுள் ரேகையை ஒட்டி ஆரம்பமாகி, உள்ளங்கையில் குறுக்காக செவ்வாய் மேடு அல்லது சந்திர மேட்டை நோக்கிச் செல்லும் ரேகை புத்தி ரேகை ஆகும். இது ஓரளவு அழுத்தமாகவும், தெளிவாகவும் , மெல்லியதாகவும் இருந்து தீவு, புள்ளி, உடைதல், போன்ற குறைபாடுகள் இல்லாது அமைந்தால் இவர்கள் புத்திசாலியாகவும் , அதிக ஞாபக சக்தி உடையவர்களாகவும்,  நேர்மையாகவும் இருப்பர். புத்தி ரேகை நீளமாக அமைந்திருந்தால், இன்னும் விசேஷமான பலனைத் தரும். புத்தி ரேகை நமது மூளையின் அமைப்பையும், அது வேலை செய்யும் திறனையும், நமது மனோநிலையையும் எடுத்துக் காட்டுகிறது..! 

    புத்திரேகையானது ஆயுள் ரேகையுடன் இணைந்து உற்பத்தியாகாமல் அல்லது ஆயுள் ரேகையுடன் ரேகை இணைப்பு எதுவுமில்லாமல் தனித்து ஆயுள், இருதய ரேகைகளுக்கு மத்தியில் உற்பத்தியாகும் புத்திரேகை, அவ்விதம் ரேகை அமைந்தவன் புத்தியின் பலத்தையும் சுதந்திரப் போக்கையும் தன்னிச்சையான பிடிவாத குணத்தையும் காட்டும்.
    ஆயுள் ரேகையோடு புத்திரேகையானது இணைந்து உற்பத்தியாகி இருந்தால்  தாய், தந்தை, மனைவி, பிள்ளை, குடும்பமென்று பிரிக்க முடியாத பாசப்பிணைப்பு இருக்கும்.
    ஆயுள் ரேகையுடன் இணைந்த உற்பத்தியாகாத புத்தி ரேகையைக் கொண்டவர் எப்போதும் தனித்து நிற்பதில், தனித்து வாழ்வதில் பிரியம் காட்டுவார்.



    புதன் ரேகை

    இதனைப் ஆரோக்கிய ரேகை என்றும் கூறுவர். இது விதி ரேகையின் அருகே ஆரம்பித்து புதன் மேடு வரை செல்லும். உடல் நிலை எவ்வாறு உள்ளது என்பதை இந்த ரேகை எடுத்துக் காட்டும். உள்ளங்கையில் உள்ள மற்ற ரேகைகளான புத்திரேகை, ஆயுள் ரேகை, இருதய ரேகை ஆகியவற்றில் ஏதாவது குறைபாடு இருந்தாலும், இந்தப் புதன் ரேகை நன்றாக அமைந்திருந்தால், இவர்களது தேகத்தில் ஏதாவது பீடைகள் வந்தாலும், அவையெல்லாம் உடனடியாக நிவர்த்தியாவதற்கு இது உறுதுணையாக இருக்கும். மேலும், புதன் மேடு பலவீனமாக இருந்தாலும் இந்த ரேகை பலமாக இருந்தால் புதன் மேட்டால் ஏற்படும் குறைபாடுகள் யாவும் விலகி விடும். இந்த ரேகை தெளிவாகவும், மெல்லியதாகவும், ஓரளவு அழுத்தமாகவும் இருப்பது நல்லது. தீவு, பிளவு, வெட்டுக்குறி, சங்கிலிக் குறி போன்ற குறைபாடுகள் ஏதும் இல்லாது இது அமைந்திந்தால் இவர்கள் நல்ல பேச்சு சாதூர்யம், சொல்வன்மை கலை, வியாபரத்திறமை ஆகியவற்றுடன் பெரும் பணம் சம்பாதித்து சிறப்பாக வாழ்வர்.

    இருதய ரேகை

    இது புதன் மேட்டில் உற்பத்தியாகிச் சூரிய மேடுகளைத் தாண்டி குரு மேட்டில் முடியும். சிலருக்கு இந்த இருதய ரேகை சனி மேட்டில் முடியும்; அல்லது கிரக மேடுகளுக்கு வெகுவாக கீழே தள்ளிப் புத்திரேகையை ஒட்டியும் முடியலாம். சிலர் கைகளில் புத்தி ரேகை, இருதய ரேகை ஆகிய இரண்டும் சேர்ந்து, உள்ளங்கையில் குறுக்கே ஒரே ரேகையாகவும் காணப்படலாம். இருதய ரேகை மூலம் நமது இருதயம் எவ்வாறு வேலை செய்கிறது என்பதையும், இருதயத் துடிப்பு இரத்த ஓட்டம் போன்றவற்றையும், இருதயத்தில் ஏற்படக் கூடிய கோளாறுகளையும் தெரிந்து கொள்ளலாம். இந்த ரேகை மூலம் அன்பு, பாசம், காதல் போன்ற உணர்வுகள் எந்த அளவில் உள்ளன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

    சூரிய ரேகை

    விதி ரேகைக்கு இணையாக, மோதிர விரலின் கீழே இருக்கும். இது புகழையும், இகழையும் குறிப்பிட்டுக் காட்டும்


    பிற முக்கிய ரேகைகள்...

    சுக்கிர ரேகை
    மணிக்கட்டிற்கு அருகில் உள்ளங்கையின் கீழிலிருந்து, சுண்டு விரலை நோக்கி உள்ளங்கையின் மேல்நோக்கி ஓடுகிறது; தொடர்ச்சியான உடல்நல பிரச்சினைகள், வியாபார புத்திசாலித்தனம், அல்லது தொடர்பு கொள்வதில் திறமை ஆகியவற்றைக்  குறிப்பிட்டுக்காட்டும்.

    சுக்கிரனின் வட்டப்பாதை
    இது சுண்டு விரலுக்கும், மோதிர விரலுக்கும் இடையில் தொடங்கி, மோதிர விரல் மற்றும் நடுவிரல்களுக்கு கீழே ஒரு கீற்று போல ஓடி, நடுவிரலுக்கும், சுட்டு விரலுக்கும் இடையில் முடிகிறது; இது உணர்வுப்பூர்வமான அறிவு மற்றும் திறமையாக கையாள்வதற்கான திறமை ஆகியவற்றோடு தொடர்புபட்டது. 

    அப்போலோ ரேகை
    இது ஓர் அதிருஷ்ட வாழ்க்கையைக் குறிக்கிறது; இது மணிக்கட்டில் இருக்கும் சந்தர மேட்டில் இருந்து, மோதிர விரலுக்கு (அப்போலோ விரலுக்கு) இடையில் பயணிக்கிறது. 

    வட்ட ரேகை
    இது ஆயுள் ரேகையைக் கடந்து 'x' வடிவத்தை உருவாக்குகிறது. இது மிகவும் தீமையின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. கைரேகை பார்க்க வருபவருக்கு கவலையை உண்டாக்கும் என்பதால், கைரேகை பார்ப்பவர்கள் பொதுவாக இந்த ரேகையைக் குறிப்பிட்டு கூறுவதில்லை. வட்ட ரேகையின் பொதுவான குறியீடுகள், பிற ரேகைகளால் 'M' என்று உருவாக்கப்பட்டிருக்கும்.

    நட்பு ரேகைகள்
    குறுகிய கிடைமட்ட ரேகைகள், இது உள்ளங்கையின் மோதும் விளிம்பில் இதய ரேகைக்கும், சுண்டு விரலின் கீழ் பகுதிக்கும் இடையில் காணப்படும்; நெருங்கிய உறவுகள், சிலநேரங்களில் - ஆனால் எப்போதும் கிடையாது - காதல் ஆகியவற்றைக் குறிப்பிட்டுக் காட்டும் என்று நம்பப்படுகிறது. 

    பயண ரேகைகள்
    கிடைமட்ட ரேகைகளான இவை உள்ளங்கையின் புடைத்த விளிம்பில் மணிக்கட்டிற்கும், இதய ரேகைக்கும் இடையில் காணப்படுகிறது; ஒவ்வொரு ரேகையும் அந்த நபரால் மேற்கொள்ளப்படும் ஒரு பயணத்தைக் குறிப்பிடுவதாக கூறப்படுகிறது - இந்த ரேகை நீண்டிருந்தால், அந்த நபருக்கு மிகவும் முக்கியமான பயணம் அமையும் என்று கூறப்படுகிறது.

    பிற குறியீடுகள். 
    நட்சத்திரங்கள், வெட்டுகள், முக்கோணங்கள், சதுரங்கள், திரிசூலங்கள், மற்றும் வளையங்கள் ஆகியவை உட்பட ஒவ்வொரு விரல்களின் கீழேயும் இவை இருக்கின்றன; உள்ளங்களையில் இவை இருக்கும் இடம் மற்றும் பிற ரேகைகளின் குறுக்கீடு இல்லாமல் இருக்கும் தன்மை ஆகியவற்றைக் கொண்டு இவற்றின் அர்த்தங்களும் பாதிப்புகளும் கணிக்கப்படும். 

    ஒரு செல்வந்தனின் கைரேகையின் அம்சங்கள் எவை..?.

    "ராகு மேடு, மற்றும் கேது மேடு என்பவை எங்கே ?" 
    ஆரம்ப காலங்களில் ராகு கேது தவிந்த மற்றைய ஏழு கிரகங்களே இருந்தன என்று சங்ககால இலக்கியங்கள் கூறுகின்றன.இதிலிருந்து சாயா கிரகங்களான ராகு மற்றும் கேது என்பவை காலப்போக்கிலேயே தோன்றியுள்ளன எனவும் கைரேகைக்கலை எவ்வளவு பழமையானது என்றும் அறியலாம்..!
    ராகு- கேதுவுக்கு தனி நாள், கிழமை ஒதுக்கவில்லை என்றாலும், ஒவ்வொரு நாளும் மூன்றே முக்கால் நாழிகை (ஒன்றரை மணி நேரம்) ராகுவுக்கு பலம் உண்டு. அதுதான் ராகு காலம்..! அதே போல கேதுவுக்குப் பொருந்திய காலம் எமகண்டம்...! ராகுவும் கேதுவும் தனியான கிரகங்கள் இல்லை. கிரகங்களின் நிழல் என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். வான வெளியில் சூரியனுடைய சுழற்சிப் பாதையும் சந்திரனுடைய சுழற்சிப் பாதையும் ஒரு குறிப்பிட்ட எல்லையில் சந்திக்கும். அப்படி வடதிசையில் ஏற்படும் சந்திப்பை ராகு என்றும்; அதே நேரத்தில் அதற்கு நேர் எதிரில் 180-ஆவது டிகிரியில் சமசப்தமமாக ஏற்படும் தென்திசைச் சந்திப்பை கேது என்றும் விஞ்ஞானிகள் கூறுவார்கள். இதையே நமது முன்னோர்களும் மெய்ஞ்ஞானிகளும் ஜோதிட சாஸ்திர மகான்களும் ராகு- கேதுக்களை சாயா கிரகங்கள் (நிழல் கிரகங்கள்) என்று எழுதி வைத்தார்கள். 
    இந்த படத்தில் காட்டியுள்ள நெப்டியூன் மேட்டை பற்றியும் யுரேனஸ்  மேடு எங்கே? என்றும் என்னிடம் கேட்காதீர்கள்...! இதைப்பற்றி நானே குழம்பிப் போயிருக்கிறேன்...!



    "விக்கிபீடியா"வில் இதுபற்றிய மேலதிக விபரங்கள் உள்ளன...

     


    ஜாதகத்தில் என்ன அறியலாம்?  எந்த பகுதியில் அறியலாம்?
    1. 1மிடம் .லக்னம். இது ஜாதகரை பற்றி அறிய. பிரச்சனைக்கு உரிய தீர்வு என்ன? அது எப்போது? 

    2. 2மிடம். பணவரவினங்களை பற்றி அறிய, கண்ணை பற்றி அறிய, வாக்கு, புதியன வருதல்,
        புதிய நபர் வருகை பற்றி,ஷேர் மார்க்கெட், இளைய சகோதரத்தின் இடமாற்றம்.
        குழந்தையின் தொழில் வெற்றி,தந்தையின் நோய்,செருப்பு,கண்,பண இருப்பு,
        விலை மதிப்புமிக்க பொருள், ஜாதகரது குடும்பம், வருமானம், வரவேண்டிய பணம் முதலியன

    3. 3மிடம்.  சகோதரம்,தைரியம், வீரியம்\வீரம்,வெற்றி, அண்டை வீடுகள்,குறு தூரப் பயணம்,
         மெயில\போன் செய்திகள், தகவல் தொடர்பு, வீடு விற்பனை, வேலைக்காரர்கள், செய்திகள், 
        பேரம் பேசுதல்,பாகப்பிரிவினை செய்தல், ஆரம்ப கல்வித் தடை, நிருபர்கள், புரோக்கர்கள் பற்றி

    4. 4மிடம் தாய், சுகம், குழந்தைக்கு வைத்தியம் செய்வது, வீட்டுக்குப் பயன்படக்கூடிய இயந்திரங்கள்,
      வீடு வாசல் ,மாடு,கன்று, கல்லறை,இரகசிய வாழ்க்கையை பற்றி, கற்பு பற்றி, தோட்டம், கட்டிடங்கள்,
      விவசாயம், ஆரம்பக் கல்வி,வியாபாரம், நீர் ஊற்றுக்கள், திருடி வைத்திருக்கும் பொருட்கள், 
      புதையல் பற்றி.

    5. 5மிடம் குழந்தையைப்பற்றி, குழந்தை உண்டா? எப்போது,எத்தனை, குழந்தை உற்பத்தி திறன்பாதிப்பு,
        குழந்தைக்கு தொந்தரவு, பாட்டன்,பாட்டி,பூர்வ ஜென்ம புண்யம், மனம், எண்ணம், வம்சா வழி,காதலைப்பற்றி
        சந்தோஷம் பற்றி, அதீர்ஷ்டம்,இஷ்ட தெய்வம்,சிற்றின்பம், மந்திர உச்சாடனம்,உபாசனை, இஷ்ட தெய்வம்,
        கற்பழிப்பு,வழிபாடு,ஸ்டாக் எக்சேஞ்ச் சூதாட்டம் முதலியன

    6. 6மிடம் கடனை பற்றி,நோய்யை பற்றியோ,வழக்கு பற்றி, ஜீரணம், ஊழியர், சிறுதொழில்,
        சிறிய வருமானம் தரும் தொழில்,வெற்றிக்கான தடை, கஞ்சத்தனம், மிகப்பேராசை, 
        திருட்டு பற்றி, ஜெயில், மூத்த சகோதர பிரச்சினை, வளர்ப்புப் பிராணிகள், வீட்டு மிருகங்கள்
        பற்றி அறிய 

    7. 7மிடம் திருமணம் , திருமண வாழ்க்கை , மனைவி, சட்டப்படியான அங்கீகாரம், சமூகப் பழக்க வழக்கம், நண்பர்கள்,
        ஆயுளுக்குத் தொந்தரவு, திருடனைப் பற்றி, வேலையாட்களின் பணம், பொது ஜனத் தொடர்பு,
        அபராதம், ஒரு பொருள் திரும்பக் கிடைத்தல் பற்றி,வரவேண்டிய பணம் எப்போது கிடைக்கும் 
        இரகசிய விரோதிகளால் ஏற்படும் தொந்தரவு பற்றி, காணாமல் போனது எப்போது கிடைக்கும்


    8. ஆயுள்பற்றி, காணாமல் போனது பற்றி, அவமானம் பற்றி,கண்டம் பற்றி, இயற்கையான மரணம்,
    கெட்ட பயம்,வளர்ப்பு பிராணிகளால் தொந்தரவு, வட்டி கட்டுதல்,திடீர் அதிஷ்டம், உயில்தடை, 
    கெட்ட செயல், வரதட்சணை,சீர், மாங்கல்யம், காணாமல் போனது எப்போது கிடைக்கும் எப்போது கிடைக்கும், 
    ஆப்ரேஷன் பற்றி, கர்பப்பை பற்றி,வரவேண்டிய பணம், மரணம்.

    9. தந்தை,மத ஆச்சாரம்,குல வழக்கம்,குருவை பற்றி,உடனே பலன்  தரும் தெய்வம், மதத்தின் மீதானபற்று,
       மறுஉலக தொடர்பு, பெரியவர்கள், தூரத்து செய்திகள்,திருமண மண்டபம்,கலாச்சார விருப்பம்,
     நீண்ட தூரப் பயணம், தொழில் விரயம், தெய்வ வழிப்பாட்டு இடம்,தம்பியின் மனைவி,
    பணம் புரட்டுதல்,ஜபம்,உயர் கல்வி ,வெளிநாட்டுப் பயணம்,

    10. தொழில்,ஜீவனம் ,புகழ்,கௌரவம்,சமூக அந்தஸ்த்து,கர்மம்,கருமாதி,இறுதிச்சடங்கு,
         புனித வழிபாடு,குழந்தையின் நோய்,மூத்த சகோதரத்தின் விரயம்,தத்துக் குழந்தைகள்,
    தீர்ப்பு,மரணம் அடைந்தவர்களை பற்றி.

    11. லாபம்,மூத்த சகோதரம்,எதீர்பார்த்தது நன்மையில் முடியுமா?,நண்பர்கள்,ஆசைகள்,
    முழுமையாக எதீர்பார்ப்பின்றி தரும் இடம். ஆலோசனை. உதவி கிடைக்குமிடம் 
    வெற்றி,மருமகன்,மருமகள்,நீர்ப் பாசன வசதிகளுடன்கூடிய விவசாய நிலங்கள்.
     அரசு மன்றங்கள்\குழுக்கள் (சட்ட சபை,ஊராட்சி,நகராட்சி),நிரந்தர நட்பு\நண்பர்கள்,திட்டங்கள்
    வரவேண்டிய பணம் கிடைக்கும் நேரம் முதலியன.

    12. செலவு\விரையம், மருத்துவம், நஷ்டம் முதலியவை பற்றி முக்தியடைதல் மோட்சம் கிடைத்தல் பற்றி.